• Mar 31 2025

சுற்றுலா சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கி 6 பேர் பலி - எகிப்தில் துயரம்

Thansita / Mar 27th 2025, 9:46 pm
image

எகிப்தின் செங்கடலில் 45 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற நீர் மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 6 பேர் பலியாகிய துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது 

பல நாடுகளை சேர்ந்த 44 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த சிந்துபாத் என்ற நீர்மூழ்கியே  இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில்  ஒன்பது பேர் காப்பாற்றப்பட்டதுடன்  நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் 29 பேரை காயங்களின்றி காப்பாற்ற முடிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

செங்கடலில் உள்ள பவளப்பாறைகளை பார்வையிடுவதற்காக துறைமுகம் அருகே செல்லும் போது திடீரென விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது.

 இதற்கான விரிவான விசாரணை நடந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது 

சுற்றுலா சென்ற நீர்மூழ்கிக் கப்பல் கடலில் மூழ்கி 6 பேர் பலி - எகிப்தில் துயரம் எகிப்தின் செங்கடலில் 45 சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற நீர் மூழ்கிக் கப்பல் மூழ்கியதில் 6 பேர் பலியாகிய துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது பல நாடுகளை சேர்ந்த 44 பயணிகளுடன் பயணித்துக்கொண்டிருந்த சிந்துபாத் என்ற நீர்மூழ்கியே  இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.இவ்விபத்தில்  ஒன்பது பேர் காப்பாற்றப்பட்டதுடன்  நால்வர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தெரிவித்துள்ள அதிகாரிகள் 29 பேரை காயங்களின்றி காப்பாற்ற முடிந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.செங்கடலில் உள்ள பவளப்பாறைகளை பார்வையிடுவதற்காக துறைமுகம் அருகே செல்லும் போது திடீரென விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கியது. இதற்கான விரிவான விசாரணை நடந்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது 

Advertisement

Advertisement

Advertisement