• Sep 08 2024

இலங்கையில் 6 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம்..! தாய் உட்பட நால்வர் அதிரடியாக கைது

Chithra / Jul 17th 2024, 4:51 pm
image

Advertisement

 

மாவனல்லை பகுதியில் 6 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் உட்பட நால்வரை அரநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உள்ளான குழந்தை தொடர்பில் அயலவர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் நால்வரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சிறுமியொருவரை அடித்து துன்புறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.

குழந்தை  தனது தாயுடன் மாவனல்லை, அரநாயக்க, எலகஸ்தன்னவில் வசித்து வருவதாகவும், தாயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தையின் தந்தை தாயை பிரிந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கல்வி கற்கும் வயதாகியும் பாடசாலைக்கு குழந்தை அனுப்பப்படாமல் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்,

தாய் உட்பட இரு வயோதிபர்கள் அவ்வப்போது சிறுமியை கொடூரமாக தாக்கி வந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் அரநாயக்க பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், 

42 தொடக்கம் 78 வயதுகளை உடைய இரண்டு வயோதிபர்கள், குழந்தையின் தாய் மற்றும் தாக்குதலை ஊக்குவித்ததாக கூறப்படும் அயலகப் பெண் ஆகியோர்  கைது செய்யப்பட்டனர்.

கைதுசெய்யப்பட்ட நால்வரும்  இன்று (17) மாவனல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், துன்புறுத்தப்பட்ட சிறுமி அவரது தந்தையின் பாதுகாப்பில் வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.


இலங்கையில் 6 வயது குழந்தைக்கு நடந்த கொடூரம். தாய் உட்பட நால்வர் அதிரடியாக கைது  மாவனல்லை பகுதியில் 6 வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தாய் உட்பட நால்வரை அரநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளனர்.தாக்குதலுக்கு உள்ளான குழந்தை தொடர்பில் அயலவர்கள் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் நால்வரையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் சிறுமியொருவரை அடித்து துன்புறுத்தும் காணொளி சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டுள்ளது.குழந்தை  தனது தாயுடன் மாவனல்லை, அரநாயக்க, எலகஸ்தன்னவில் வசித்து வருவதாகவும், தாயுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக குழந்தையின் தந்தை தாயை பிரிந்து சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும், கல்வி கற்கும் வயதாகியும் பாடசாலைக்கு குழந்தை அனுப்பப்படாமல் வீட்டிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும்,தாய் உட்பட இரு வயோதிபர்கள் அவ்வப்போது சிறுமியை கொடூரமாக தாக்கி வந்துள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பில் அரநாயக்க பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பிரகாரம், 42 தொடக்கம் 78 வயதுகளை உடைய இரண்டு வயோதிபர்கள், குழந்தையின் தாய் மற்றும் தாக்குதலை ஊக்குவித்ததாக கூறப்படும் அயலகப் பெண் ஆகியோர்  கைது செய்யப்பட்டனர்.கைதுசெய்யப்பட்ட நால்வரும்  இன்று (17) மாவனல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன், துன்புறுத்தப்பட்ட சிறுமி அவரது தந்தையின் பாதுகாப்பில் வைத்தியரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement