அக்கரப்பத்தனை ஹோல்புறூக் பிரதேசத்தில் இயங்கும் பிரசித்தி பெற்ற தேயிலை தொழிற்சாலையில் 1500 கிலோ கிராம் கொண்ட தேயிலை தூள் களவாடி விற்பனை செய்த 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
தேயிலை தொழிற்சாலையில் ஏற்றுமதி செய்வதற்காக பொதி செய்யப்பட்டிருந்த தேயிலை தூளினை லொறியில் ஏற்றி வெளியில் கொண்டு சென்றுள்ளனர்.
இது தொடர்பாக தொழிற்சாலை முகாமையாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலை முகாமையாளர் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.
பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த லொறியும் களவாடப்பட்ட தேயிலைத் தூளையும் பொலிசார் கைப்பற்றியதோடு சம்பவம் தொடர்பாக ஏழு பேரையும் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காவலாளிகள் என தெரிய வந்துள்ளது.
குறித்த நபர்கள் 15 இன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதில் 7 பேரும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
தேயிலை தூள் களவாடி விற்பனை செய்த 7 பேர் கைதுsamugammedia அக்கரப்பத்தனை ஹோல்புறூக் பிரதேசத்தில் இயங்கும் பிரசித்தி பெற்ற தேயிலை தொழிற்சாலையில் 1500 கிலோ கிராம் கொண்ட தேயிலை தூள் களவாடி விற்பனை செய்த 7 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.இச்சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,தேயிலை தொழிற்சாலையில் ஏற்றுமதி செய்வதற்காக பொதி செய்யப்பட்டிருந்த தேயிலை தூளினை லொறியில் ஏற்றி வெளியில் கொண்டு சென்றுள்ளனர்.இது தொடர்பாக தொழிற்சாலை முகாமையாளருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. கிடைத்த தகவலை முகாமையாளர் பொலிஸ் நிலையத்திற்கு அறிவித்துள்ளார்.பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த லொறியும் களவாடப்பட்ட தேயிலைத் தூளையும் பொலிசார் கைப்பற்றியதோடு சம்பவம் தொடர்பாக ஏழு பேரையும் கைது செய்தனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் காவலாளிகள் என தெரிய வந்துள்ளது.குறித்த நபர்கள் 15 இன்று நுவரெலியா நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியதில் 7 பேரும் சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.