8 வயதான சிறுமி ஒருவரை இரண்டு மாதங்களாக பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 70 வயதான தேரர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான விசாரணைகளை ஹெட்டிப்பொல காவல்துறையினர் ஆரம்பித்துள்ளனர்.
சந்தேகநபரான குறித்த பௌத்த பிக்கு இரண்டு மாதங்களாக சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, தற்போது குறித்த தேரர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரைத் தேடுவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் ஆரம்பித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.