• Sep 20 2024

பெப்ரல் அமைப்பிடம் 80 முறைப்பாடு - தேர்தல்கள் ஆணைக்குழுவில் 20 முறைப்பாடு!

Tamil nila / Feb 12th 2023, 10:44 am
image

Advertisement

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.


தேர்தல் தொடர்பான இடையூறுகள் தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் ஆணையத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


அரசியல் அதிகாரம் மற்றும் சில அமைப்புகளிடமிருந்தே இந்த அழுத்தங்கள் வந்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


மாவட்ட மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.


இதேவேளை, அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் அதிகாரிகளை சந்திப்பது இது இரண்டாவது முறையாகும்.


இதேவேளை, இதுவரை சாதாரண மட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் சுமார் 80 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டாராச்சி குறிப்பிட்டார்.

பெப்ரல் அமைப்பிடம் 80 முறைப்பாடு - தேர்தல்கள் ஆணைக்குழுவில் 20 முறைப்பாடு உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.தேர்தல் தொடர்பான இடையூறுகள் தொடர்பாக இதுவரை 20க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் ஆணையத்திற்கு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.அரசியல் அதிகாரம் மற்றும் சில அமைப்புகளிடமிருந்தே இந்த அழுத்தங்கள் வந்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.மாவட்ட மற்றும் உதவி தேர்தல் ஆணையாளர்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவின் பிரதிநிதிகளுக்கு இடையில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது.இதேவேளை, அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் செவ்வாய்கிழமை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் அரசியல் கட்சி பிரதிநிதிகள் தேர்தல் அதிகாரிகளை சந்திப்பது இது இரண்டாவது முறையாகும்.இதேவேளை, இதுவரை சாதாரண மட்டத்தில் தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் சுமார் 80 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டாராச்சி குறிப்பிட்டார்.

Advertisement

Advertisement

Advertisement