• Sep 21 2024

83 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில்- கலகத் தடுப்பு பொலிஸாரும் ஆயத்த நிலையில்!

Tamil nila / Sep 21st 2024, 8:53 pm
image

Advertisement

ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்காக 83 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.

இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 4.00 மணிக்கு முடிவடைந்தது.

இந்நிலையில், தேர்தல் நடவடிக்கைகளுக்காக 83 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் 2,500 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

நாடளாவிய ரீதியில் 51 தேர்தல் வாக்கெண்ணும் நிலையங்களும்  13,421 வாக்கெடுப்பு நிலையங்களும் காணப்படுகின்றன.

ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

எவ்வாறிருப்பினும், இந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் மிகவும் அமைதியான தேர்தலாக கருதப்படுகின்றது. 

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது தகவல்களை வழங்குவதற்கு 119, 107 , 118 (வடக்கு மற்றும் கிழக்கு ) 011 202 7149 / 011 201 3243 மற்றும் Fax - 111 239 9104 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

83 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில்- கலகத் தடுப்பு பொலிஸாரும் ஆயத்த நிலையில் ஜனாதிபதி தேர்தல் நடவடிக்கைகளுக்காக 83 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ் மா அதிபருமான நிஹால் தல்துவ தெரிவித்தார்.இன்று சனிக்கிழமை (21) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று (21) காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 4.00 மணிக்கு முடிவடைந்தது.இந்நிலையில், தேர்தல் நடவடிக்கைகளுக்காக 83 ஆயிரம் பொலிஸ் உத்தியோகத்தர்களும் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் 2,500 பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.நாடளாவிய ரீதியில் 51 தேர்தல் வாக்கெண்ணும் நிலையங்களும்  13,421 வாக்கெடுப்பு நிலையங்களும் காணப்படுகின்றன.ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு 17,140,354 பேர் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்திருந்தது.எவ்வாறிருப்பினும், இந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் மிகவும் அமைதியான தேர்தலாக கருதப்படுகின்றது. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஏதேனும் முறைப்பாடுகள் அல்லது தகவல்களை வழங்குவதற்கு 119, 107 , 118 (வடக்கு மற்றும் கிழக்கு ) 011 202 7149 / 011 201 3243 மற்றும் Fax - 111 239 9104 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement