• Sep 22 2024

உலங்கு வானூர்தி மூலம் எடுத்து வரப்பட்ட வாக்குப் பெட்டிகள்!

Tamil nila / Sep 21st 2024, 9:23 pm
image

Advertisement

யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு வாக்கு பெட்டிகள் எடுத்துவரப்பட்டுள்ளன.

இலங்கையின் ஒன்பதாவது  ஜனாதிபயை தெரிவு செய்கின்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெற்றிருந்தது.

யாழ்.மாவட்டத்தின் 10 தேர்தல் தொகுதிகளிலும் உள்ள 511 வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில்  பொலிஸ் பாதுகாப்புடன் இன்று பிற்பகல் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.

நெடுந்தீவிற்கான வாக்கு பெட்டிகள் விமான படையின் உதவியுடன் உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்திற்கு எடுத்துவரப்பட்டு வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உலங்கு வானூர்தி மூலம் எடுத்து வரப்பட்ட வாக்குப் பெட்டிகள் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு வாக்கு பெட்டிகள் எடுத்துவரப்பட்டுள்ளன.இலங்கையின் ஒன்பதாவது  ஜனாதிபயை தெரிவு செய்கின்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று இடம்பெற்றிருந்தது.யாழ்.மாவட்டத்தின் 10 தேர்தல் தொகுதிகளிலும் உள்ள 511 வாக்களிப்பு நிலையங்களில் இருந்தும் வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில்  பொலிஸ் பாதுகாப்புடன் இன்று பிற்பகல் யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கு எடுத்து வரப்பட்டுள்ளது.நெடுந்தீவிற்கான வாக்கு பெட்டிகள் விமான படையின் உதவியுடன் உலங்குவானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்திற்கு எடுத்துவரப்பட்டு வாக்கு எண்ணும் நிலையத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 இலட்சத்து 92 ஆயிரத்து 280 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement