• Sep 19 2024

குழந்தை பெற்ற 16 வயது சிறுமியால் பரபரப்பு...! – 19 வயது காதலன் கைது! samugammedia

Chithra / Sep 4th 2023, 5:51 pm
image

Advertisement

மொனராகலை, கலபெத்த, அம்பலாந்த பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளமை அப்பகுதியிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொனராகலை அலியாவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒன்பதாம் தரம் வரை கல்வி கற்று வரும் இந்த சிறுமி தனது தாயுடன் அம்பலாந்த பிரதேசத்தில் கரும்பு வெட்டச் சென்ற போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.

வீட்டு பெரியவர்களின் சம்மதத்தின் பேரில், மொனராகலை பிரதேசத்தில் உள்ள திருமணப் பதிவாளர் ஒருவரால், சிறுமிக்கு 19 வயது எனக் பொய்யான ஆவணங்களை கொடுத்து சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.

பின்னர் இருவரும் அம்பலாந்த பகுதியில் உள்ள இளைஞரின் வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி மொனராகலை பொது வைத்தியசாலையில் குறித்த சிறுமி ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருமணமானபோது அவருக்கு 14 வயது 07 நாட்கள் என அறியமுடிவதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய 19 வயது கணவரை கைது செய்து விசாரணைகளை மொனராகலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


குழந்தை பெற்ற 16 வயது சிறுமியால் பரபரப்பு. – 19 வயது காதலன் கைது samugammedia மொனராகலை, கலபெத்த, அம்பலாந்த பகுதியைச் சேர்ந்த 16 வயதுச் சிறுமி ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளமை அப்பகுதியிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மொனராகலை அலியாவத்தை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஒன்பதாம் தரம் வரை கல்வி கற்று வரும் இந்த சிறுமி தனது தாயுடன் அம்பலாந்த பிரதேசத்தில் கரும்பு வெட்டச் சென்ற போது, அந்தப் பகுதியைச் சேர்ந்த இளைஞருடன் காதல் தொடர்பு ஏற்பட்டுள்ளது.வீட்டு பெரியவர்களின் சம்மதத்தின் பேரில், மொனராகலை பிரதேசத்தில் உள்ள திருமணப் பதிவாளர் ஒருவரால், சிறுமிக்கு 19 வயது எனக் பொய்யான ஆவணங்களை கொடுத்து சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.பின்னர் இருவரும் அம்பலாந்த பகுதியில் உள்ள இளைஞரின் வீட்டில் ஒன்றாக வசித்து வந்த நிலையில் கடந்த மாதம் 31ஆம் திகதி மொனராகலை பொது வைத்தியசாலையில் குறித்த சிறுமி ஆண் குழந்தை பிறந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.திருமணமானபோது அவருக்கு 14 வயது 07 நாட்கள் என அறியமுடிவதாகவும், சம்பவத்துடன் தொடர்புடைய 19 வயது கணவரை கைது செய்து விசாரணைகளை மொனராகலை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement