திருகோணமலை -மொறாவெவ இந்திராராம விகாரையின் பிரதம விகாராதிபதி உபரத்தின தேரர், கிழக்கிலங்கையின் பிரசித்தமான சின்னக் கதிர்காமம் என்றழைக்கப்படும் வெருகல் -சித்திரவேலாயுதர் சுவாமி தேவஸ்தானத்திற்கு இன்று(27) நல்லிணக்க விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது கோயிலின் முதன்மை கங்கானத்தோடு கலந்துரையாடியதோடு மதிய போசனத்திலும் கலந்து கொண்டனர்.
இதன் பின்னர், வெள்ளத்தினால் வெருகல் ஆலயத்தின் ஓரமாய் உள்ள மஹாவலி கங்கை உடைப்பெடுத்து மரங்கள், அணைக்கட்டுக்கள் வீடுகள் சேதமான இடங்களையும் பார்வையிட்டார்.