• May 10 2026

மண்ணில் புதைந்த குடும்பம்; இன்று வரை மீட்க முடியாத அவலம்! தீவிர தேடுதலில் இராணுவம்

Chithra / Dec 2nd 2025, 1:21 pm
image


நாட்டில் ஏற்பட்ட கடும் மழை காரணமான கந்தப்பளை - சந்திரிகாமம் பகுதியில் காணாமல் போன குடும்பங்களை  தேடும் நடவடிக்கையை இராணுவம் தற்போது ஆரம்பித்துள்ளது. 


தாய், இரண்டு குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். 


நுவரெலியா சிங்கப் படையணியைச் சேர்ந்த படையினர் நேற்று (01) முதல் தேடுதல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். 


கடந்த 27ஆம் திகதி மதியம் குறித்த பகுதியில் பெய்த பலத்த மழையினால் இந்த வீடு மண்ணுக்குள் புதையுண்டதாகவும், அந்த நேரத்தில் அவர்கள் அனைவரும் வீட்டினுள் இருந்ததாகவும் பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.

மண்ணில் புதைந்த குடும்பம்; இன்று வரை மீட்க முடியாத அவலம் தீவிர தேடுதலில் இராணுவம் நாட்டில் ஏற்பட்ட கடும் மழை காரணமான கந்தப்பளை - சந்திரிகாமம் பகுதியில் காணாமல் போன குடும்பங்களை  தேடும் நடவடிக்கையை இராணுவம் தற்போது ஆரம்பித்துள்ளது. தாய், இரண்டு குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகியோரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர். நுவரெலியா சிங்கப் படையணியைச் சேர்ந்த படையினர் நேற்று (01) முதல் தேடுதல் பணிகளை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த 27ஆம் திகதி மதியம் குறித்த பகுதியில் பெய்த பலத்த மழையினால் இந்த வீடு மண்ணுக்குள் புதையுண்டதாகவும், அந்த நேரத்தில் அவர்கள் அனைவரும் வீட்டினுள் இருந்ததாகவும் பிரதேசமக்கள் தெரிவிக்கின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement