வவுனியா கற்பகபுரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்ற 41 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்ததுடன் பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த நிக்சன் என்ற இளைஞர் காயமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
கடந்த 27 ஆம் திகதி இரவு அநுராதபுரம் மாவட்டத்தின் கெப்பிற்றிக் கொல்லாவ பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த கப்ரக வாகனத்தை அந்த பகுதியில் கடமையில் இருந்த விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர்.
இதன்போது குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றதால் விசேட அதிரடிப்படையினரால் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளது.
இதன்போது அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்திருந்தனர்.
காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் ஒருவரது நிலமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார்.
அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் காலை உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் பலியான குடும்பஸ்தர் தமிழர் பகுதியில் நடந்த சம்பவம் விசேட அதிரடிப்படையினரின் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்திருந்த குடும்பஸ்தர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். வவுனியா கற்பகபுரம் பகுதியை சேர்ந்த சந்திரசேகர் என்ற 41 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்ததுடன் பண்டிவிரிச்சான் பகுதியை சேர்ந்த நிக்சன் என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,கடந்த 27 ஆம் திகதி இரவு அநுராதபுரம் மாவட்டத்தின் கெப்பிற்றிக் கொல்லாவ பகுதியில் இருந்து வவுனியா நோக்கி வந்துகொண்டிருந்த கப்ரக வாகனத்தை அந்த பகுதியில் கடமையில் இருந்த விசேட அதிரடிப்படையினர் வழிமறித்துள்ளனர்.இதன்போது குறித்த வாகனம் நிறுத்தாமல் சென்றதால் விசேட அதிரடிப்படையினரால் அந்த வாகனத்தின் மீது துப்பாக்கிச்சூடு நடாத்தப்பட்டுள்ளது.இதன்போது அதில் பயணித்த இருவர் படுகாயமடைந்திருந்தனர்.காயமடைந்த இருவரும் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவரது நிலமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் காலை உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.