• Oct 05 2024

புகையிரதம் மோதுண்டதில் குடும்பஸ்தர் ஒருவர் பலி..!samugammedia

Tharun / Feb 2nd 2024, 6:32 pm
image

Advertisement

பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதம் மோதுண்டதில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.


கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில், குறித்த கடவையை கடக்க முற்பட்டவரையே புகையிரதம் மோதியுள்ளது.


விபத்தில் மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


சம்பவத்தில் கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சிவராசமுத்தையா சசிவதனன் எனும் 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


புகையிரதம் மோதுண்டதில் குடும்பஸ்தர் ஒருவர் பலி.samugammedia பாதுகாப்பு கடவையை கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் புகையிரதம் மோதுண்டதில் பலியாகியுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 5 மணியளவில் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சி டிப்போ வீதியில் புகையிரத நிலையத்துக்கு அண்மித்துள்ள பாதுகாப்பான புகையிரத கடவை மூடப்பட்ட நிலையில், குறித்த கடவையை கடக்க முற்பட்டவரையே புகையிரதம் மோதியுள்ளது.விபத்தில் மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.சம்பவத்தில் கிளிநொச்சி - விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 44 வயதுடைய சிவராசமுத்தையா சசிவதனன் எனும் 5 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement