யாழில் கடற்றொழிலில் ஈடுபட்ட மீனவர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
யாழ் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் இன்று(16) அதிகாலை கடற்றொழிலுக்கு சென்ற நிலையில் இதுவரை கரை திரும்பாத நிலையில் அவர் சென்ற தெப்பம் கரை ஒதுங்கியுள்ளது.
இந்நிலையில் காணாமல் போன குறித்த கடற்றொழிலாளரை தேடும் பணியில் மீனவர்களும் கடற்படையினரும் ஈடுபட்டுள்ளனர்.
மருதங்கேணி வடக்கைச் சேர்ந்த 60 வயதுடைய முத்துச்சாமி தவராசா என்பவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.