• May 17 2024

உள்ளுராட்சி சபை முன்னாள் தவிசாளர் மீது வாள்வெட்டு...! ஐவர் காயம்

Chithra / Dec 31st 2023, 11:58 am
image

Advertisement

  

இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் களுத்துறை உள்ளுராட்சி சபையின் முன்னாள் தவிசாளரும், மேல் மாகாண முன்னாள் உறுப்பினருமான ஜி.என்.பி.பெரேரா உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (28) நள்ளிரவு வாதுவ, மொல்லிகொடவில் உள்ள முன்னாள் தவிசாளரின் வீட்டில் தகராறு ஏற்பட்டதாகவும், தாக்கியவர்களைக் கண்டால் அடையாளம் காண முடியும் எனவும் முறைப்பாட்டை பதிவு செய்த பெண் பொலிஸில் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளுராட்சி சபை முன்னாள் தவிசாளர் மீது வாள்வெட்டு. ஐவர் காயம்   இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் களுத்துறை உள்ளுராட்சி சபையின் முன்னாள் தவிசாளரும், மேல் மாகாண முன்னாள் உறுப்பினருமான ஜி.என்.பி.பெரேரா உட்பட ஐவர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்களில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று (28) நள்ளிரவு வாதுவ, மொல்லிகொடவில் உள்ள முன்னாள் தவிசாளரின் வீட்டில் தகராறு ஏற்பட்டதாகவும், தாக்கியவர்களைக் கண்டால் அடையாளம் காண முடியும் எனவும் முறைப்பாட்டை பதிவு செய்த பெண் பொலிஸில் தெரிவித்துள்ளார்.சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement