• Sep 13 2026

பஸ்ஸுக்குள் புகுந்த கும்பல் வெறிச்செயல் - இரு இளைஞர்கள் வைத்தியசாலையில்

Chithra / Sep 13th 2026, 4:31 pm
image


புத்தளம் - சிலாபம் நகரின் பண்டாரவத்தை பகுதியில் தனியார் பஸ்ஸுக்குள் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


காயமடைந்த இருவரும் மதம்பை – மெதகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


தாக்குதலில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் முதலில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


மற்றைய இளைஞர் பாதுகாப்புத் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்துள்ளதுடன், அவர் தொடர்ந்தும் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.


கடந்த 10ஆம் திகதி மாலை, தனது பயணத்தை நிறைவு செய்துவிட்டு அன்றாட பணிகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனியார் பஸ்ஸுக்குள் கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.


முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.


சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


பஸ்ஸுக்குள் புகுந்த கும்பல் வெறிச்செயல் - இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் புத்தளம் - சிலாபம் நகரின் பண்டாரவத்தை பகுதியில் தனியார் பஸ்ஸுக்குள் இடம்பெற்ற தாக்குதலில் இரண்டு இளைஞர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.காயமடைந்த இருவரும் மதம்பை – மெதகம பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.தாக்குதலில் வெட்டுக் காயங்களுக்கு உள்ளான இளைஞர் ஒருவர் முதலில் சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ராகம போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.மற்றைய இளைஞர் பாதுகாப்புத் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்துள்ளதுடன், அவர் தொடர்ந்தும் சிலாபம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.கடந்த 10ஆம் திகதி மாலை, தனது பயணத்தை நிறைவு செய்துவிட்டு அன்றாட பணிகளுக்குத் தயாராகிக் கொண்டிருந்த தனியார் பஸ்ஸுக்குள் கும்பல் ஒன்று அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.முதற்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், தனிப்பட்ட தகராறு காரணமாக இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.எனினும், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement