அம்பாறையிலுள்ள பிரதேசத்திற்குள் 8 அடி நீளமுடைய இராட்சத முதலை ஒன்று இன்று காலை (27) புகுந்துள்ளது.
அம்பாறை - பாலமுனை பகுதியிலுள்ள பிரதேசத்திற்குள் திடீரென முதலை ஒன்று புகுந்து அச்சுறுத்தியுள்ளது. இதனால் அந்தப்பகுதியிலிருந்த பெரியோர், சிறியோர், குழந்தைகள் என அனைவரும் அச்சத்திற்குள்ளாகினர்.
அதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து குறித்த முதலையைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்தனர். முதலை சுமார் 8 அடி நீளமுடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த முதலை பாலமுனை கடற்கரைப் பகுதி வழியாக கரையை அடைந்து பின்னர் பிரதேசத்திற்குள் நுழைந்திருக்கலாம் என அந்தப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
முதலையை மரத்தில் கட்டிவைத்து விட்டு இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.
ஊருக்குள் புகுந்த 8 அடி நீளமுடைய இராட்சத முதலை அம்பாறையிலுள்ள பிரதேசத்திற்குள் 8 அடி நீளமுடைய இராட்சத முதலை ஒன்று இன்று காலை (27) புகுந்துள்ளது. அம்பாறை - பாலமுனை பகுதியிலுள்ள பிரதேசத்திற்குள் திடீரென முதலை ஒன்று புகுந்து அச்சுறுத்தியுள்ளது. இதனால் அந்தப்பகுதியிலிருந்த பெரியோர், சிறியோர், குழந்தைகள் என அனைவரும் அச்சத்திற்குள்ளாகினர். அதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து குறித்த முதலையைப் பிடித்து மரத்தில் கட்டிவைத்தனர். முதலை சுமார் 8 அடி நீளமுடையது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த முதலை பாலமுனை கடற்கரைப் பகுதி வழியாக கரையை அடைந்து பின்னர் பிரதேசத்திற்குள் நுழைந்திருக்கலாம் என அந்தப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். முதலையை மரத்தில் கட்டிவைத்து விட்டு இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் அந்தப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.