• Jul 27 2024

வாழைச்சேனையில் பாரிய பெட்டி சரிந்து விழுந்து இளைஞன் பரிதாப மரணம்...!

Sharmi / May 29th 2024, 3:56 pm
image

Advertisement

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில்  4ஆம் வாட் ரான்ஸ் போட் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனம் ஒன்றில் இருந்த பொருட்கள் அடங்கிய பெட்டியானது சரிந்து விழுந்த நிலையில், அதில் அகப்பட்ட இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் இன்று (29) வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு 'காகோவில' ; இருந்து வெளிநாட்டு பெட்டிகளை ஏற்றி வந்த வாகனம் அப் பெட்டிகளில் சிலவற்றை பிரிதொரு வாகனத்திற்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையில்  ஊழியர்கள் ஈடுபட்ட போது அதில் ஒரு பாரிய பெட்டியானது திடீரென சரிந்து விழுந்த நிலையில் அதில் அகப்பட்ட இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந் நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் வழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் உடற் கூற்றாய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.

பிறைந்துறைச்சேனை வாழைச்சேனையைச் சேர்ந்த 23 வயதுடைய எம்.ஜ.எம்.றிமாஸ் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




வாழைச்சேனையில் பாரிய பெட்டி சரிந்து விழுந்து இளைஞன் பரிதாப மரணம். வாழைச்சேனை பொலிஸ் பிரிவில்  4ஆம் வாட் ரான்ஸ் போட் பள்ளி வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனம் ஒன்றில் இருந்த பொருட்கள் அடங்கிய பெட்டியானது சரிந்து விழுந்த நிலையில், அதில் அகப்பட்ட இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் இன்று (29) வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கொழும்பு 'காகோவில' ; இருந்து வெளிநாட்டு பெட்டிகளை ஏற்றி வந்த வாகனம் அப் பெட்டிகளில் சிலவற்றை பிரிதொரு வாகனத்திற்கு மாற்றம் செய்யும் நடவடிக்கையில்  ஊழியர்கள் ஈடுபட்ட போது அதில் ஒரு பாரிய பெட்டியானது திடீரென சரிந்து விழுந்த நிலையில் அதில் அகப்பட்ட இளைஞன் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந் நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலம் வழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் உடற் கூற்றாய்விற்காக வைக்கப்பட்டுள்ளது.பிறைந்துறைச்சேனை வாழைச்சேனையைச் சேர்ந்த 23 வயதுடைய எம்.ஜ.எம்.றிமாஸ் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement