• Sep 19 2024

புத்தளத்தில் பெருந்தொகையான மஞ்சள் மீட்பு..!

Sharmi / Sep 11th 2024, 8:40 am
image

Advertisement

புத்தளம் சேரக்குளி கடற்பிரதேசத்தில் இருந்து ஒருதொகை மஞ்சள் நேற்றையதினம்(10) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

வடமேற்கு கடற்படைக் கட்டளையின் விரைவான நடவடிக்கை கடற்படைப் படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த சில உரமூடைகளை சோதனை செய்துள்ளனர்.

இதன்போது,  குறித்த உரமூடைகளில் உலர்ந்த மஞ்சள் இருந்தமை தெரியவந்துள்ளது.

குறித்த காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 14 உர மூடைகளில் இருந்து 470 கிலோ கிராம் மஞ்சள் காணப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.

குறித்த மஞ்சள் இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் எனவும் கடற்படையின் கெடுபிடிகள் காரணமாக சந்தேக நபர்கள் மஞ்சள் அடங்கிய உரமூடைகளை காட்டுப் பகுதியில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 470 கிலோ கிராம் மஞ்சள் அடைக்கப்பட்ட உரமூடைகளை மேலதிக விசாரணைக்காக தமது பொறுப்பில் வைத்திருப்பதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.


புத்தளத்தில் பெருந்தொகையான மஞ்சள் மீட்பு. புத்தளம் சேரக்குளி கடற்பிரதேசத்தில் இருந்து ஒருதொகை மஞ்சள் நேற்றையதினம்(10) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.வடமேற்கு கடற்படைக் கட்டளையின் விரைவான நடவடிக்கை கடற்படைப் படையினர் குறித்த கடற்பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் கைவிடப்பட்டிருந்த சில உரமூடைகளை சோதனை செய்துள்ளனர்.இதன்போது,  குறித்த உரமூடைகளில் உலர்ந்த மஞ்சள் இருந்தமை தெரியவந்துள்ளது.குறித்த காட்டுப்பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 14 உர மூடைகளில் இருந்து 470 கிலோ கிராம் மஞ்சள் காணப்பட்டதாக கடற்படையினர் தெரிவித்தனர்.குறித்த மஞ்சள் இந்தியாவில் இருந்து கடல்மார்க்கமாக இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்யும் நோக்கில் இவ்வாறு எடுத்து வந்திருக்கலாம் எனவும் கடற்படையின் கெடுபிடிகள் காரணமாக சந்தேக நபர்கள் மஞ்சள் அடங்கிய உரமூடைகளை காட்டுப் பகுதியில் கைவிட்டுச் சென்றிருக்கலாம் எனவும் தாம் சந்தேகிப்பதாக கடற்படையினர் குறிப்பிட்டனர்.இவ்வாறு கடற்படையினரால், கைப்பற்றப்பட்ட 470 கிலோ கிராம் மஞ்சள் அடைக்கப்பட்ட உரமூடைகளை மேலதிக விசாரணைக்காக தமது பொறுப்பில் வைத்திருப்பதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement