• Dec 17 2025

உமி மூட்டைகளுடன் தடம்புரண்ட லொறி; சாரதியின் தூக்கக் கலக்கத்தில் திருமலையில் விபத்து

Chithra / Dec 17th 2025, 9:11 am
image

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள முன்னம்போடிவெட்டை பகுதியில் இன்று காலை பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.


திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.


இவ்விபத்தில் வாகனச் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன், அவர் தெய்வாதீனமாக காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார்.


கல்முனையிலிருந்து திருகோணமலைக்கு உமி ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளது.


சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென தெரியவருகிறது. 


விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.   


உமி மூட்டைகளுடன் தடம்புரண்ட லொறி; சாரதியின் தூக்கக் கலக்கத்தில் திருமலையில் விபத்து மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள முன்னம்போடிவெட்டை பகுதியில் இன்று காலை பயணித்த லொறியொன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று அதிகாலை இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.இவ்விபத்தில் வாகனச் சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன், அவர் தெய்வாதீனமாக காயங்களின்றி உயிர் தப்பியுள்ளார்.கல்முனையிலிருந்து திருகோணமலைக்கு உமி ஏற்றிக்கொண்டு பயணித்த லொறியே இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளது.சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென தெரியவருகிறது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில் மூதூர் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.   

Advertisement

Advertisement

Advertisement