• Jun 29 2025

கட்டார் அரசுக்கும் மக்களுக்கும் விரைவில் அமைதியான சூழல் ஏற்படும் - பிரதி அமைச்சர் நம்பிக்கை

Chithra / Jun 29th 2025, 1:15 pm
image


வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் கட்டார் வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுல்தான் பின் சாத் அல் முரைக்கி ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது.

இதன்போது, அல் உதெய்த் விமானப்படை தளத்தின் மீதான சமீபத்திய தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், அதற்காக இலங்கை சார்பில் வருத்தங்களையும் அமைச்சர் தெரிவித்தார்.

கட்டார் அரசுக்கும் அதன் மக்களுக்கும் விரைவில் அமைதியான சூழல் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், இதுபோன்ற காலங்களில் இலங்கை அதன் நட்பு நாடான கட்டார் அரசுக்கு ஆதரவாக நிற்கிறது என்றும் வலியுறுத்தப்பட்டது. 

134,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கட்டாரில் வசித்து வருகின்றனர், மேலும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக கட்டார் அரசு வழங்கும் அக்கறைக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் கட்டார் அரசின் அர்ப்பணிப்புக்கு சிறப்பு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

கட்டார் அரசுக்கும் மக்களுக்கும் விரைவில் அமைதியான சூழல் ஏற்படும் - பிரதி அமைச்சர் நம்பிக்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புத்துறை பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா மற்றும் கட்டார் வெளிவிவகாரத்துறை அமைச்சர் சுல்தான் பின் சாத் அல் முரைக்கி ஆகியோருக்கிடையில் கலந்துரையாடல் ஒன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது.இதன்போது, அல் உதெய்த் விமானப்படை தளத்தின் மீதான சமீபத்திய தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டதுடன், அதற்காக இலங்கை சார்பில் வருத்தங்களையும் அமைச்சர் தெரிவித்தார்.கட்டார் அரசுக்கும் அதன் மக்களுக்கும் விரைவில் அமைதியான சூழல் ஏற்படும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.மேலும், இதுபோன்ற காலங்களில் இலங்கை அதன் நட்பு நாடான கட்டார் அரசுக்கு ஆதரவாக நிற்கிறது என்றும் வலியுறுத்தப்பட்டது. 134,000 க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கட்டாரில் வசித்து வருகின்றனர், மேலும் அவர்களின் பாதுகாப்பு மற்றும் கண்ணியத்திற்காக கட்டார் அரசு வழங்கும் அக்கறைக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது.இதேவேளை, பிராந்தியத்தில் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்துவதில் கட்டார் அரசின் அர்ப்பணிப்புக்கு சிறப்பு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement