• Jul 27 2024

ஐந்து கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது...!

Sharmi / May 27th 2024, 8:40 am
image

Advertisement

ஐந்து கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பாணந்துறை, வலபால பிரதேசத்தில் உள்ள வீதியொன்றுக்கு அருகில் சந்தேகநபரிடம் இருந்து சுமார் இரண்டு கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் துபாயில் பதுங்கி இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் துபாய் தரங்காவின் முக்கிய சகா என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறை வலோபால பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும்  அவரை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஐந்து கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது. ஐந்து கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, பாணந்துறை, வலபால பிரதேசத்தில் உள்ள வீதியொன்றுக்கு அருகில் சந்தேகநபரிடம் இருந்து சுமார் இரண்டு கிலோ ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.இவர் துபாயில் பதுங்கி இருந்து போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் துபாய் தரங்காவின் முக்கிய சகா என போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பாணந்துறை வலோபால பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் எனவும்  அவரை பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement