• Jun 08 2025

மின்சார சபை ஊழியர்களை கோடரியால் தாக்க முயன்ற நபர் கைது

Chithra / Jun 8th 2025, 7:49 am
image


மொனராகலையில் வீடு ஒன்றின் மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார சபை ஊழியர்கள் குழுவை தடுத்த நபர் ஒருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார ஊழியர்களை, சம்பந்தப்பட்ட நபர் கோடரியால் தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் அவர், மின்வாரிய ஊழியர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த நபர் தொடர்பாக மின்சார சபை அதிகாரிகள் வெல்லவாய பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


மின்சார சபை ஊழியர்களை கோடரியால் தாக்க முயன்ற நபர் கைது மொனராகலையில் வீடு ஒன்றின் மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார சபை ஊழியர்கள் குழுவை தடுத்த நபர் ஒருவர் வெல்லவாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.மின்சாரத்தை துண்டிக்க வந்த மின்சார ஊழியர்களை, சம்பந்தப்பட்ட நபர் கோடரியால் தாக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.பின்னர் அவர், மின்வாரிய ஊழியர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், குறித்த நபர் தொடர்பாக மின்சார சபை அதிகாரிகள் வெல்லவாய பொலிஸில் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில், அவரைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.இதற்கமைய கைது செய்யப்பட்ட சந்தேக நபரை வெல்லவாய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement