யாழில் தனியாக வசித்து வந்த நபரொருவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கொல்லாலை வீதி, இளவாலையைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பிரான்பீற்றர் (வயது- 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரிய வருகையில்,
குறித்த நபர் திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் வலிப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.
உறவினர் ஒருவர் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தபோதே அவர் உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து உறவினரால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. தகவலுக்கமைய குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை இளவாலை பொலிஸார் நெறிப்படுத்தினர்.
யாழில் தனியாக வசித்து வந்த நபர்; வலிப்பு ஏற்பட்டு உயிரிழப்பு யாழில் தனியாக வசித்து வந்த நபரொருவர் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொல்லாலை வீதி, இளவாலையைச் சேர்ந்த அந்தோனிப்பிள்ளை பிரான்பீற்றர் (வயது- 67) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரிய வருகையில்,குறித்த நபர் திருமணமாகாத நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இவ்வாறான சூழ்நிலையில் வலிப்பு ஏற்பட்டு, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் இறந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.உறவினர் ஒருவர் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தபோதே அவர் உயிரிழந்த விடயம் தெரியவந்துள்ளது.அதனையடுத்து உறவினரால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது. தகவலுக்கமைய குறித்த பகுதிக்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். சாட்சிகளை இளவாலை பொலிஸார் நெறிப்படுத்தினர்.