• Apr 25 2026

புல்மோட்டை நகரில் சட்டவிரோதமாக டீசல் விற்றவர் கைது

Chithra / Mar 4th 2026, 10:47 am
image



புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 


நேற்று (03) இரவு வேளையில் புல்மோட்டைபொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். 


இதன்போது பொலிஸார் குறித்த வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேகநபரை கைது செய்துள்ளதோடு, அவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 390 லீற்றர் டீசலையும் பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளனர். 


கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அர்பத் நகர், புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார். 


சந்தேகநபர் இன்று (04) குச்சவெளி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, புல்முடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

புல்மோட்டை நகரில் சட்டவிரோதமாக டீசல் விற்றவர் கைது புல்மோட்டை நகரில் உள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் அனுமதிப்பத்திரமின்றி அதிக விலைக்கு டீசல் விற்பனை செய்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (03) இரவு வேளையில் புல்மோட்டைபொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள் குழுவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைவாக இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது பொலிஸார் குறித்த வர்த்தக நிலையத்தை முற்றுகையிட்டு சந்தேகநபரை கைது செய்துள்ளதோடு, அவரிடமிருந்து சட்டவிரோதமான முறையில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த 390 லீற்றர் டீசலையும் பொலிஸ் பொறுப்பில் எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் அர்பத் நகர், புல்மோட்டை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் ஆவார். சந்தேகநபர் இன்று (04) குச்சவெளி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு, புல்முடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement