ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பர பகுதியில் தடி ஒன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.
63 வயதுடைய தம்பர, மீவனபலான பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்
குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது
தனது வீட்டில் நபரொருவருடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டது
இவ்வாக்குவாதம் தீவிரமடைந்ததால், சந்தேகநபர் அவரது தலையில் தடியால் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர், உயிரிழந்த நபரின் உறவினர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹொரணை பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்
மேலும் , நேற்றிரவு, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு மற்றொரு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
ஹொரணையில் நபரொருவர் அடித்துக்கொலை ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பர பகுதியில் தடி ஒன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் இடம்பெற்றுள்ளது.63 வயதுடைய தம்பர, மீவனபலான பகுதியைச் சேர்ந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார்குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதுதனது வீட்டில் நபரொருவருடன் மது அருந்திக் கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதுஇவ்வாக்குவாதம் தீவிரமடைந்ததால், சந்தேகநபர் அவரது தலையில் தடியால் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. சந்தேகநபர், உயிரிழந்த நபரின் உறவினர் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. ஹொரணை பொலிஸார், சந்தேக நபரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்மேலும் , நேற்றிரவு, கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்தடி பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு மற்றொரு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவமும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது