• Jul 05 2024

மொட்டு கட்சியின் அமைச்சர்கள் இருவருக்கு இடையில் வெடித்த கைகலப்பு..?

Chithra / May 27th 2024, 8:15 am
image

Advertisement

 

பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரவு விருந்துபசாரம் ஒன்றின்போது இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோருக்கு இடையில் சிறு கைகலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.

பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் நடந்த சம்பவத்தில் ரணவீர ஈடுபாடு குறித்து லொஹான் ரத்வத்த கேள்வி எழுப்பியபோதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

இந்த சம்பவம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவதூறான செயல் என்று ரத்வத்த கூறியமையே கைகலப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.

எனினும், அனுராதபுரம்  சிறைச்சாலையில் கைதி ஒருவரை நோக்கி ரத்வத்த கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சம்பவம் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இழுக்கை தரும் செயல் என்று ரணவீர பதிலுக்கு தெரிவித்துள்ளார்.


மொட்டு கட்சியின் அமைச்சர்கள் இருவருக்கு இடையில் வெடித்த கைகலப்பு.  பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இரவு விருந்துபசாரம் ஒன்றின்போது இராஜாங்க அமைச்சர்களான பிரசன்ன ரணவீர மற்றும் லொஹான் ரத்வத்த ஆகியோருக்கு இடையில் சிறு கைகலப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த சம்பவம் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றுள்ளது.பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் அண்மையில் நடந்த சம்பவத்தில் ரணவீர ஈடுபாடு குறித்து லொஹான் ரத்வத்த கேள்வி எழுப்பியபோதே இந்த மோதல் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.இந்த சம்பவம் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அவதூறான செயல் என்று ரத்வத்த கூறியமையே கைகலப்புக்கு காரணமாக அமைந்துள்ளது.எனினும், அனுராதபுரம்  சிறைச்சாலையில் கைதி ஒருவரை நோக்கி ரத்வத்த கைத்துப்பாக்கியைக் காட்டி மிரட்டிய சம்பவம் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இழுக்கை தரும் செயல் என்று ரணவீர பதிலுக்கு தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement