'ஊழலற்ற எதிர்காலம்' என்னும் தலைப்பில் சொற்பொழிவு ஒன்று இன்றையதினம்(14) வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியில் நடைபெற்றது.
வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரியின் சோமசுந்தரப்புலவர் அரங்கில், கல்லூரியின் முதல்வர் லங்கா பிரதீபன் தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.
இந்திய துணைத் தூதரகம், வடக்கு மாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து நடாத்தும் இந்த சொற்பொழிவில், தமிழ்நாடு - கல்வி உளவியலாளர், முனைவர் சரண்யா ஜெய்குமார் அவர்கள் பேச்சாளராக கலந்து கொண்டார்.
இந் நிகழ்வில் பாடசாலை மாணவர்கள் ,ஆசிரியர்கள், கல்வி சாரா உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.