பண்டாரவளை உடுகும்பல்வெல சரணாலயப் பகுதிக்கு அருகிலுள்ள மலைத்தொடர் அருகில் இன்று (18) காலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
பண்டாரவளை, அத்தலப்பிட்டிய வனப்பாதுகாப்புப் பிரிவுக்குச் சொந்தமான உடுகும்பல்வெல சரணாலயப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள செங்குத்தான சரிவைக் கொண்ட மலைத்தொடரின் புல்வெளியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்தையடுத்து அங்குள்ள பரந்த காட்டுப் பகுதிகளில் தீ பரவல் அதிகரித்து வருகின்றது. தீப்பரவலைக் கட்டுப்படுத்த தியத்தலாவ இராணுவ வீரர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
காடுகளில் பரவியுள்ள தீ, வனவிலங்கு சரணாலயத்திற்குள் பரவுவதைத் தடுக்க தீ தடுப்பு வேலியை வெட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை வன பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.
இதுவரை சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு தீயில் அழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலத்த காற்று, வறண்ட வானிலை மற்றும் செங்குத்தான சரிவு காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாகியுள்ளதாக வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தீடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பண்டாரவளை பகுதியில் பதற்ற சூழல் உருவாகியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்தும் தீப்பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் பகுதியிலும் தீ பரவி விடுமா என்பது குறித்து மக்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
மலைத்தொடரில் திடீரென பரவிய தீ; கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திண்டாட்டம் பண்டாரவளை உடுகும்பல்வெல சரணாலயப் பகுதிக்கு அருகிலுள்ள மலைத்தொடர் அருகில் இன்று (18) காலை திடீரென காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. பண்டாரவளை, அத்தலப்பிட்டிய வனப்பாதுகாப்புப் பிரிவுக்குச் சொந்தமான உடுகும்பல்வெல சரணாலயப் பகுதிக்கு அருகில் அமைந்துள்ள செங்குத்தான சரிவைக் கொண்ட மலைத்தொடரின் புல்வெளியில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.தீ விபத்தையடுத்து அங்குள்ள பரந்த காட்டுப் பகுதிகளில் தீ பரவல் அதிகரித்து வருகின்றது. தீப்பரவலைக் கட்டுப்படுத்த தியத்தலாவ இராணுவ வீரர்கள் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். காடுகளில் பரவியுள்ள தீ, வனவிலங்கு சரணாலயத்திற்குள் பரவுவதைத் தடுக்க தீ தடுப்பு வேலியை வெட்டி பாதுகாப்பு நடவடிக்கைகளை வன பாதுகாப்பு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.இதுவரை சுமார் 15 ஏக்கர் நிலப்பரப்பு தீயில் அழிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலத்த காற்று, வறண்ட வானிலை மற்றும் செங்குத்தான சரிவு காரணமாக தீயைக் கட்டுப்படுத்துவது கடினமாகியுள்ளதாக வனப் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீடீரென ஏற்பட்ட தீ விபத்தால் பண்டாரவளை பகுதியில் பதற்ற சூழல் உருவாகியுள்ளது. தீயைக் கட்டுப்படுத்த முயற்சித்தும் தீப்பரவல் அதிகரித்து வருவதால் மக்கள் பகுதியிலும் தீ பரவி விடுமா என்பது குறித்து மக்கள் அச்சத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.