• Apr 17 2026

துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவர் மீது வாள்வெட்டு!

Chithra / Mar 1st 2026, 11:26 am
image


வீட்டிற்குள் புகுந்து நபர் ஒருவரைச் சுட முற்பட்ட இனந்தெரியாத துப்பாக்கிதாரி மீது, அந்த வீட்டின் உரிமையாளர் நாற்காலி மற்றும் வெட்டுக் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். 


தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்தவர் குருநாகல் - அலவ்வ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. 


இச்சம்பவம் குறித்து முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், 


களுத்துறை ரஜவத்த பகுதியைச் சேர்ந்த "பெத்தா" என்பவர் தன்னிடம் பெற்ற 30,000 ரூபாய் கடனைத் திருப்பித் தருவதற்காக தனது வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது அவருடன் வந்த இனந்தெரியாத நபர் தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டதாகவும் குறிப்பிட்டார். 


அச்சமயத்தில் தனது வீட்டில் இருந்த நாற்காலி மற்றும் வாளால் அவரைத் தாக்கி விரட்டியடித்ததாக முறைப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார். 


தாக்குதலுக்குள்ளான அந்த நபரை பொலிஸார் கைது செய்த நிலையில் அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர். 


குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 


சந்தேக நபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.


துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டவர் மீது வாள்வெட்டு வீட்டிற்குள் புகுந்து நபர் ஒருவரைச் சுட முற்பட்ட இனந்தெரியாத துப்பாக்கிதாரி மீது, அந்த வீட்டின் உரிமையாளர் நாற்காலி மற்றும் வெட்டுக் கத்தியால் தாக்குதல் நடத்தியுள்ளார். தாக்குதலுக்கு உள்ளாகி காயமடைந்தவர் குருநாகல் - அலவ்வ பகுதியைச் சேர்ந்தவர் எனத் தெரியவந்துள்ளது. இச்சம்பவம் குறித்து முறைப்பாட்டாளர் பொலிஸாரிடம் தெரிவிக்கையில், களுத்துறை ரஜவத்த பகுதியைச் சேர்ந்த "பெத்தா" என்பவர் தன்னிடம் பெற்ற 30,000 ரூபாய் கடனைத் திருப்பித் தருவதற்காக தனது வீட்டிற்கு வந்ததாகவும், அப்போது அவருடன் வந்த இனந்தெரியாத நபர் தம்மீது துப்பாக்கிச் சூடு நடத்த முற்பட்டதாகவும் குறிப்பிட்டார். அச்சமயத்தில் தனது வீட்டில் இருந்த நாற்காலி மற்றும் வாளால் அவரைத் தாக்கி விரட்டியடித்ததாக முறைப்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார். தாக்குதலுக்குள்ளான அந்த நபரை பொலிஸார் கைது செய்த நிலையில் அவரிடம் இருந்து ஒரு கைத்துப்பாக்கி மற்றும் 4 தோட்டாக்களையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த நபர் மேலதிக சிகிச்சைக்காக நாகொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் தற்போது பொலிஸ் பாதுகாப்பின் கீழ் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement