யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தில் மயங்கி வீழ்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (13) பதிவாகியுள்ளது.
விசாரணை ஒன்றிற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த குறித்த வயோதிப பெண் திடீரென மயக்கமுற்று வீழ்ந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
யாழ்ப்பாணம் 2ம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள வீடொன்றில் இளைஞன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து வீட்டின் உரிமையாளரான வயோதிப பெண்மணியை பொலீஸார் விசாரணைக்காக அழைத்திருந்தனர்.
இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டினை பதிவு செய்து வாக்குமூலத்தினை பெற்றுக் கொள்வதற்காக குறித்த வீட்டின் உரிமையாளரான வயோதிப பெண்மணிணை யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்திருந்தனர்.
இதற்கமைவாக குறித்த வயோதிப பெண்மணி யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்திற்கு இன்று (13) சென்றிருந்தார்.
இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்திற்கு சென்றிருந்த குறித்த வயோதிப பெண்மணி தீடிரென சுகவீனமுற்கு மயங்கி சரிந்துள்ளார். இதையடுத்து அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த வயோதிப பெண்மணியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தில் வயோதிப பெண்மணி ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது
யாழில் தவறான முடிவெடுத்த இளைஞன். பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த வயோதிப பெண்மணி. samugammedia யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தில் மயங்கி வீழ்ந்த வயோதிப பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் இன்று (13) பதிவாகியுள்ளது.விசாரணை ஒன்றிற்காக யாழ்ப்பாணம் சென்றிருந்த குறித்த வயோதிப பெண் திடீரென மயக்கமுற்று வீழ்ந்துள்ள நிலையில் உயிரிழந்துள்ளார்.சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,யாழ்ப்பாணம் 2ம் குறுக்குத் தெரு பகுதியில் உள்ள வீடொன்றில் இளைஞன் ஒருவன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.இதையடுத்து வீட்டின் உரிமையாளரான வயோதிப பெண்மணியை பொலீஸார் விசாரணைக்காக அழைத்திருந்தனர்.இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் முறைப்பாட்டினை பதிவு செய்து வாக்குமூலத்தினை பெற்றுக் கொள்வதற்காக குறித்த வீட்டின் உரிமையாளரான வயோதிப பெண்மணிணை யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்திற்கு வருமாறு அழைத்திருந்தனர்.இதற்கமைவாக குறித்த வயோதிப பெண்மணி யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்திற்கு இன்று (13) சென்றிருந்தார்.இந்நிலையில் யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்திற்கு சென்றிருந்த குறித்த வயோதிப பெண்மணி தீடிரென சுகவீனமுற்கு மயங்கி சரிந்துள்ளார். இதையடுத்து அவசர நோயாளர் காவு வண்டி மூலம் கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.குறித்த வயோதிப பெண்மணியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.யாழ்ப்பாணம் பொலீஸ் நிலையத்தில் வயோதிப பெண்மணி ஒருவர் திடீரென மயங்கி வீழ்ந்து உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது