• May 10 2024

யாழில் திருமணமாகி ஒரு வருடமேயான இளம் குடும்பப் பெண் மர்ம மரணம்..! - உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு..!

Chithra / Dec 13th 2023, 4:26 pm
image

Advertisement


யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் திருமணம் ஆகி ஒரு வருடமேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். 

உடுவில் - கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 26 வயதுடைய சண்முகநாதன் துசீந்தினி என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணிற்கு திருமணமான நிலையில் அவரது கணவர் புலம்பெயர் நாட்டில் வசித்து வருகின்றார். 

குறித்த பெண்ணுக்கு கடந்த 11ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில்  தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு,

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். 

மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், அவரது உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

குறித்த பெண்ணின் மரணம் அந்தப் பகுதி மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் திருமணமாகி ஒரு வருடமேயான இளம் குடும்பப் பெண் மர்ம மரணம். - உடற்கூற்று மாதிரிகள் கொழும்புக்கு. யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் திருமணம் ஆகி ஒரு வருடமேயான இளம் குடும்பப் பெண் ஒருவர் இன்றையதினம் உயிரிழந்துள்ளார். உடுவில் - கற்பகப் பிள்ளையார் கோவிலடியைச் சேர்ந்த 26 வயதுடைய சண்முகநாதன் துசீந்தினி என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.குறித்த பெண்ணிற்கு திருமணமான நிலையில் அவரது கணவர் புலம்பெயர் நாட்டில் வசித்து வருகின்றார். குறித்த பெண்ணுக்கு கடந்த 11ஆம் திகதி உடல் சுகயீனம் ஏற்பட்ட நிலையில்  தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.இந்நிலையில் மேலதிக சிகிச்சைக்காக அவர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு,அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்றையதினம் உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். மரணத்திற்கான காரணம் தெரியவராத நிலையில், அவரது உடற்கூற்று மாதிரிகள் கொழும்பிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. குறித்த பெண்ணின் மரணம் அந்தப் பகுதி மக்களை துயரில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement