• Sep 19 2024

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து; 2 வயது குழந்தை பரிதாப மரணம்! குழந்தைகள் உட்பட 12 பேர் காயம்

Chithra / Aug 14th 2024, 3:38 pm
image

Advertisement


தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எல்பிட்டிக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

அத்தோடு 12 பேர் காயமடைந்துள்ளனர்.

மத்தலயில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வாகனத்தின் டயர் வெடித்ததால், நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். 

காயமடைந்தவர்கள் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கதிர்காமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து; 2 வயது குழந்தை பரிதாப மரணம் குழந்தைகள் உட்பட 12 பேர் காயம் தெற்கு அதிவேக நெடுஞ்சாலை எல்பிட்டிக்கு அருகில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் 2 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.அத்தோடு 12 பேர் காயமடைந்துள்ளனர்.மத்தலயில் இருந்து கொட்டாவ நோக்கி பயணித்த வாகனத்தின் டயர் வெடித்ததால், நெடுஞ்சாலையின் நடுவில் உள்ள பாதுகாப்பு வேலியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.விபத்தில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் எல்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், கதிர்காமத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement