• Sep 20 2024

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து..! ஒருவர் படுகாயம் samugammedia

Chithra / Sep 5th 2023, 1:48 pm
image

Advertisement

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பகுதியில் லொறி ஒன்று மற்றுமொரு பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளனதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களனிகம போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தி ஒன்றுடன் பின்னால் வந்த குறித்த லொறி மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய விபத்து இடம்பெற்று உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அவசர மீட்பு அதிகாரிகள், லொறியில் சிக்கியிருந்த சாரதியை மீட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

லொறி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் காயமடைந்த சாரதியின் கவனயீனத்தினால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.

இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை கலானிகம போக்குவரத்து பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து. ஒருவர் படுகாயம் samugammedia தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கஹதுடுவ பகுதியில் லொறி ஒன்று மற்றுமொரு பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளனதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.இந்நிலையில் விபத்தில் காயமடைந்த சாரதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக களனிகம போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொழும்பு நோக்கிச் சென்ற பாரவூர்தி ஒன்றுடன் பின்னால் வந்த குறித்த லொறி மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதற்கமைய விபத்து இடம்பெற்று உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அவசர மீட்பு அதிகாரிகள், லொறியில் சிக்கியிருந்த சாரதியை மீட்டு ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.லொறி பாரியளவில் சேதமடைந்துள்ளதாகவும் காயமடைந்த சாரதியின் கவனயீனத்தினால் விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்னர்.இந்நிலையில் விபத்து தொடர்பான விசாரணைகளை கலானிகம போக்குவரத்து பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement