• Sep 08 2024

இரு விழிகளையும் இழந்த நிலையிலும் உயர்தர பரீட்சையில் சாதித்த மட்டு. மாணவன்...!

Sharmi / Jun 4th 2024, 8:54 am
image

Advertisement

ஏனைய மாணவர்களுக்கு என்ன பாடத்திட்டங்கள் உள்ளதோ அதனையே நாங்கள் கற்கின்றோம்.சில ஆசிரியர்களும் மாணவர்களும் நினைக்கின்றார்கள் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு விசேட கல்வி என நினைக்கின்றார்கள்.அவ்வாறான கருத்துகள் மாற்றம்பெறவேண்டும் என உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் சாதனை படைத்துள்ள விசேட தேவையுடைய மாணவன் பாலச்சந்திரன் பிரஷோபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இரு விழிகளையும் இழந்த மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மாணவனான பாலச்சந்திரன் ரிஷோபன் என்னும் மாணவன் உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் தோற்றி இரண்டு A சித்திகளையும் ஒரு B சித்தியையும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

அவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம்(03)  மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளரும் மாகாண கல்விப்பணிப்பாளருமான திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது குறித்த மாணவன் கல்விப்பணிமனையினால் கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.

சில ஆசிரியர்கள்,மாணவர்கள் நினைக்கின்றார்கள் விசேட தேவையுடையவர்களுக்கு விசேட கல்வி இருக்கின்றது. அதன்மூலம் அவர்கள் இலகுவாக சித்தியடைகின்றார்கள் என்று.  அவ்வாறு இல்லை நாங்களும் ஏனைய மாணவர்கள் பயிலும் அதே பாடத்திட்டத்தினையே பயில்கின்றோம்.எங்களை இயலாதவர்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.இவ்வாறான நிலை மாறவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.

குறித்த மாணவன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவினை சேர்ந்த முன்னாள் பெண் போராளியொருவரின் மகனாவார்.

இரு விழிகளையும் இழந்த நிலையில் மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையிலும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையிலும் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து இந்த சாதனையினை படைத்துள்ளார்.

இதேநேரம் குறித்த மாணவனுக்கு பல்கலைக்கழகத்தின் கல்வியை பூர்த்திசெய்வதற்கான உதவிகளை வழங்குமாறு குறித்த மாணவனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.




இரு விழிகளையும் இழந்த நிலையிலும் உயர்தர பரீட்சையில் சாதித்த மட்டு. மாணவன். ஏனைய மாணவர்களுக்கு என்ன பாடத்திட்டங்கள் உள்ளதோ அதனையே நாங்கள் கற்கின்றோம்.சில ஆசிரியர்களும் மாணவர்களும் நினைக்கின்றார்கள் விசேட தேவையுடைய மாணவர்களுக்கு விசேட கல்வி என நினைக்கின்றார்கள்.அவ்வாறான கருத்துகள் மாற்றம்பெறவேண்டும் என உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் சாதனை படைத்துள்ள விசேட தேவையுடைய மாணவன் பாலச்சந்திரன் பிரஷோபன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இரு விழிகளையும் இழந்த மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலை மாணவனான பாலச்சந்திரன் ரிஷோபன் என்னும் மாணவன் உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவில் தோற்றி இரண்டு A சித்திகளையும் ஒரு B சித்தியையும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.அவரை கௌரவிக்கும் நிகழ்வு நேற்றையதினம்(03)  மட்டக்களப்பு வலய கல்வி அலுவலகத்தில் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளரும் மாகாண கல்விப்பணிப்பாளருமான திருமதி சுஜாதா குலேந்திரகுமார் தலைமையில் நடைபெற்றது.இதன்போது குறித்த மாணவன் கல்விப்பணிமனையினால் கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கு பாராட்டும் தெரிவிக்கப்பட்டது.சில ஆசிரியர்கள்,மாணவர்கள் நினைக்கின்றார்கள் விசேட தேவையுடையவர்களுக்கு விசேட கல்வி இருக்கின்றது. அதன்மூலம் அவர்கள் இலகுவாக சித்தியடைகின்றார்கள் என்று.  அவ்வாறு இல்லை நாங்களும் ஏனைய மாணவர்கள் பயிலும் அதே பாடத்திட்டத்தினையே பயில்கின்றோம்.எங்களை இயலாதவர்கள் என்றே நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.இவ்வாறான நிலை மாறவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.குறித்த மாணவன் மட்டக்களப்பு மாவட்டத்தின் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரசடித்தீவினை சேர்ந்த முன்னாள் பெண் போராளியொருவரின் மகனாவார்.இரு விழிகளையும் இழந்த நிலையில் மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலையிலும் மட்டக்களப்பு சிவானந்தா தேசிய பாடசாலையிலும் தொடர்ச்சியாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்து இந்த சாதனையினை படைத்துள்ளார்.இதேநேரம் குறித்த மாணவனுக்கு பல்கலைக்கழகத்தின் கல்வியை பூர்த்திசெய்வதற்கான உதவிகளை வழங்குமாறு குறித்த மாணவனின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement