நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று (15) நடைபெற்ற சோதனைகளின் போது சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மஹபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிசர பகுதியில், வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து சுமார் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய வெலிசர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருசபாடுவ வெல்ல பகுதியில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபரிடமிருந்து 70 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவர் 37 வயதுடைய உள்ளூர் நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டின் இரு பகுதிகளில் நடந்த அதிரடி சோதனை – இருவர் கைது நாட்டின் இரு வேறு பகுதிகளில் நேற்று (15) நடைபெற்ற சோதனைகளின் போது சட்டவிரோத மதுபானத்துடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மஹபாகே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிசர பகுதியில், வலான மத்திய ஊழல் ஒழிப்பு அதிரடிப்படை அதிகாரிகள் மேற்கொண்ட விசேட சோதனையின் போது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அவரிடமிருந்து சுமார் 75 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய வெலிசர பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அதேவேளை, சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருசபாடுவ வெல்ல பகுதியில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சந்தேக நபரிடமிருந்து 70 லீற்றர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அவர் 37 வயதுடைய உள்ளூர் நபர் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இரு சம்பவங்களிலும் கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.