அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஜெ.ரஜீவன் குறிப்பிட்டார்.
இன்றையதினம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
மேலும் வைத்தியசாலையின் சுற்றுப்புறச் சூழல் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தினூடாக துப்பரவு செய்தல் தொடர்பாகவும் பார்வையிட்டார்.
எனவே வைத்தியசாலையில் நிலவும் ஆளனி பற்றாக்குறை தொடர்பாகவும் சுற்றுச்சூழலை துப்புரவு செய்து தூய்மையாக்கும் செயல் திட்டத்தை வலி.கிழக்கு பிரதேச சபையுடன் இணைந்து எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அச்சுவேலி வைத்தியசாலையின் ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கை அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் ஆளனி பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினரும் கோப்பாய் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவருமான ஜெ.ரஜீவன் குறிப்பிட்டார்.இன்றையதினம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன் வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக கேட்டறிந்தார்.மேலும் வைத்தியசாலையின் சுற்றுப்புறச் சூழல் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தினூடாக துப்பரவு செய்தல் தொடர்பாகவும் பார்வையிட்டார்.எனவே வைத்தியசாலையில் நிலவும் ஆளனி பற்றாக்குறை தொடர்பாகவும் சுற்றுச்சூழலை துப்புரவு செய்து தூய்மையாக்கும் செயல் திட்டத்தை வலி.கிழக்கு பிரதேச சபையுடன் இணைந்து எதிர்வரும் புதன்கிழமை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.