• May 06 2024

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பிரதான பூசகர் வைத்தியசாலையில் சேர்ப்பு...! வெளியான காரணம்...!

Sharmi / Mar 21st 2024, 1:17 pm
image

Advertisement

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய  பிரதான பூசகர் த.மதிமுகராசா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளில் ஈடுபட்ட சமயம் பொலிஸாரினால் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு கடந்த 19 ஆம் திகதி வரை வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த எட்டுப் பேரையும் விடுதலை செய்யுமாறு வவுனியா நீதிமன்று நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.

அதேவேளை, விடுதலையான வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் சுகவீனமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் நேற்றையதினம்(20)  சேர்க்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி 5 நாட்கள் இவர் வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய பிரதான பூசகர் வைத்தியசாலையில் சேர்ப்பு. வெளியான காரணம். வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய  பிரதான பூசகர் த.மதிமுகராசா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா வடக்கு, வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தன்று வழிபாடுகளில் ஈடுபட்ட சமயம் பொலிஸாரினால் ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு கடந்த 19 ஆம் திகதி வரை வவுனியா சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.இந்நிலையில் குறித்த எட்டுப் பேரையும் விடுதலை செய்யுமாறு வவுனியா நீதிமன்று நேற்று முன்தினம் உத்தரவு பிறப்பித்தது.அதேவேளை, விடுதலையான வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரியார் சுகவீனமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் நேற்றையதினம்(20)  சேர்க்கப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை வலியுறுத்தி 5 நாட்கள் இவர் வவுனியா சிறைச்சாலையில் உண்ணாவிரதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement