• Sep 20 2024

பணி நிறுத்தத்துக்கு தயாராகும் எயார் கனடா விமானிகள்!

Tamil nila / Sep 12th 2024, 10:48 pm
image

Advertisement

எயார் கனடா Air Canada விமானிகள் அடுத்த வாரம் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.

எயார் கனடா அல்லது 5,200 எயார் கனடா விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எயார் லைன் பைலட்ஸ் அசோசியேஷன் (ALPA), ஞாயிற்றுக்கிழமைக்குள் தமது பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால், 72 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.

72 மணிநேர வேலை நிறுத்த அறிவிப்பு காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கப்படலாம்.

எதிர்வரும் செப்டெம்பர் 18 புதன்கிழமைக்குள் செயல்பாடுகள் முழுமையாக நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வெள்ளிக்கிழமையிலிருந்தே விமானங்கள் மற்றும் செயல்பாடுகளை இரத்து செய்யத் தொடங்குவதாக ஏர் கனடா தெரிவித்துள்ளது.

அமெரிக்க விமானிகள் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள் மற்றும் மிகக் குறைவான வரிகளை செலுத்துகிறார்கள்.

ஏர் கனடாவில் உள்ள விமானிகள் குறைவான பணம் சம்பாதிப்பதுடன், பணவீக்கத்தின் விளைவாக பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த வேலைநிறுத்தம் பயணிகள் மற்றும் வணிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

எயார் கனடா விமானிகளின் வேலை நிறுத்தத்தைத் தடுக்குமாறு அரசாங்கத்தை சுமார் 100 வணிகக் குழுக்கள் வலியுறுத்தின.

எயார் கனடா மற்றும் அதன் குறைந்த கட்டண துணை நிறுவனமான எயார் கனடா ரூஜ் இணைந்து ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 670 விமானங்களை இயக்குகின்றன.

ஒரு நாள் பணிநிறுத்தம் 110,000 பயணிகளை பாதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


பணி நிறுத்தத்துக்கு தயாராகும் எயார் கனடா விமானிகள் எயார் கனடா Air Canada விமானிகள் அடுத்த வாரம் வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளனர்.எயார் கனடா அல்லது 5,200 எயார் கனடா விமானிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எயார் லைன் பைலட்ஸ் அசோசியேஷன் (ALPA), ஞாயிற்றுக்கிழமைக்குள் தமது பிரச்சினைக்கு தீர்வு எட்டப்படாவிட்டால், 72 மணிநேர வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளது.72 மணிநேர வேலை நிறுத்த அறிவிப்பு காலம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு எப்போது வேண்டுமானாலும் ஆரம்பிக்கப்படலாம்.எதிர்வரும் செப்டெம்பர் 18 புதன்கிழமைக்குள் செயல்பாடுகள் முழுமையாக நிறுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த வெள்ளிக்கிழமையிலிருந்தே விமானங்கள் மற்றும் செயல்பாடுகளை இரத்து செய்யத் தொடங்குவதாக ஏர் கனடா தெரிவித்துள்ளது.அமெரிக்க விமானிகள் அதிக பணம் சம்பாதிக்கிறார்கள் மற்றும் மிகக் குறைவான வரிகளை செலுத்துகிறார்கள்.ஏர் கனடாவில் உள்ள விமானிகள் குறைவான பணம் சம்பாதிப்பதுடன், பணவீக்கத்தின் விளைவாக பெருமளவு பாதிக்கப்படுவதாகவும் சுட்டிக்காட்டி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.இந்த வேலைநிறுத்தம் பயணிகள் மற்றும் வணிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.எயார் கனடா விமானிகளின் வேலை நிறுத்தத்தைத் தடுக்குமாறு அரசாங்கத்தை சுமார் 100 வணிகக் குழுக்கள் வலியுறுத்தின.எயார் கனடா மற்றும் அதன் குறைந்த கட்டண துணை நிறுவனமான எயார் கனடா ரூஜ் இணைந்து ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 670 விமானங்களை இயக்குகின்றன.ஒரு நாள் பணிநிறுத்தம் 110,000 பயணிகளை பாதிக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement