ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்துள்ள பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் இன்று ஒருவரது சடலம் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியது.
விமானத்தில் 242 பயணிகள் பயணித்த நிலையில் ஒருவரைத் தவிர மிகுதி 241 பயணிகளும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அத்துடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களில் 5 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறியதையடுத்து அதில் சிக்கி உயிரிழந்த பயணிகளின் சடலங்களை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் விமானம் நொருங்கிய பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் விமானத்தில் பயணித்த ஒருவரது உடல் கிடைத்துள்ளது என்றும் கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்த விபத்துக்குள்ளான விமானத்தின் வால் பகுதியை கிழே இறக்கும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன என்றும் தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
கிடைக்கப்பட்ட சடலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் மேலும் பலரது சடலங்கள் அடையாளம் தெரியாத நிலையில் டீ.என்.ஏ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
டீ.என்.ஏ பரிசோதனைகளின் பின்னர் சடலம் உரிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கனவுகளுடன் விமானத்தில் பயணித்து உயிரிழந்து அனைவரது நினைவுகளையும் கண்ணீருடன் அவர்களது உறவினர்கள் பகிர்ந்து வருவது அனைவரையும் கவலையில் ஆழத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா விமான விபத்து - சிதைந்த நிலையில் பயணியின் சடலம். - தொடரும் மீட்புப் பணிகள். ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்துள்ள பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டு வரும் நிலையில் இன்று ஒருவரது சடலம் சிதைவடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியது. விமானத்தில் 242 பயணிகள் பயணித்த நிலையில் ஒருவரைத் தவிர மிகுதி 241 பயணிகளும் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். அத்துடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களில் 5 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏர் இந்தியா விமானம் வெடித்து சிதறியதையடுத்து அதில் சிக்கி உயிரிழந்த பயணிகளின் சடலங்களை மீட்கும் பணிகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இந்த நிலையில் விமானம் நொருங்கிய பகுதியில் இன்று மேற்கொள்ளப்பட்ட மீட்புப் பணிகளில் விமானத்தில் பயணித்த ஒருவரது உடல் கிடைத்துள்ளது என்றும் கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்த விபத்துக்குள்ளான விமானத்தின் வால் பகுதியை கிழே இறக்கும் பணிகள் இன்று மேற்கொள்ளப்பட்டன என்றும் தீயணைப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கிடைக்கப்பட்ட சடலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதுடன் மேலும் பலரது சடலங்கள் அடையாளம் தெரியாத நிலையில் டீ.என்.ஏ பரிசோதனைகளுக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. டீ.என்.ஏ பரிசோதனைகளின் பின்னர் சடலம் உரிய உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை கனவுகளுடன் விமானத்தில் பயணித்து உயிரிழந்து அனைவரது நினைவுகளையும் கண்ணீருடன் அவர்களது உறவினர்கள் பகிர்ந்து வருவது அனைவரையும் கவலையில் ஆழத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.