அகமதாபாத் - ஏர் இந்தியா விமானம் மருத்துவக் கல்லூரியின் விடுதிக் கட்டடத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேளை ஜன்னல் வழியே பல மாணவர்கள் வெளியே சென்று உயிர் தப்பியுள்ள காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியது.
விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பயணிகளில் ஒருவரைத் தவிர மிகுதி 241 பயணிகளும் உயிரிழந்தனர். அத்துடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களில் 5 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விமான விபத்து தொடர்பான பல அதிர்ச்சியூட்டும் காட்சிகள் தொடர்ச்சியாக வெளிவரும் நிலையில் மருத்துவக் கல்லூரி விடுதியிலிருந்து மாணவர்கள் வெளியேறும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தின் மீது விமானம் விழுந்து நொருங்கியதில் கட்டடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளன. அவ்வேளை விடுதியிலிருந்த மாணவர்கள் சிலர் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கட்டடத்தின் பல்கனி மற்றும் அறைகளில் உள்ள ஜன்னல் வழியாக குதித்து வெளியேறியுள்ளனர்.
கட்டடம் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் மாணவர்கள் வெளியேற எந்தவொரு வழியும் இருந்திருக்க முடியாது. அதனால் அறைகளிலிருந்த நீண்ட துணிகள், படுக்கை விரிப்புகள் என்பவற்றைப் பயன்படுத்தி மாணவர்கள் சிலர் வெளியே சென்று உயிரைக் காப்பற்றிக் கொண்டனர்.
மாணவர்கள் வெளியேறும் காட்சிகள் ஒரு கணம் அவர்களது உயிர் போய்விடுமா என்ற ஏக்கம், பதற்றம் பயம் என்பவற்றோடு கலந்த ஆபத்தான காட்சியாகப் பதிவாகியுள்ளது.
ஒட்டுமொத்த உலகையும் திகைக்க வைத்த ஏர் இந்தியா விமான விபத்தின் காட்சிகள் ஒவ்வொன்றாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏர் இந்தியா விமான விபத்து - கட்டடத்திலிருந்து குதித்து உயிர்தப்பிய மாணவர்கள். வெளிவரும் திகில் காட்சிகள். அகமதாபாத் - ஏர் இந்தியா விமானம் மருத்துவக் கல்லூரியின் விடுதிக் கட்டடத்தில் விழுந்து விபத்துக்குள்ளான வேளை ஜன்னல் வழியே பல மாணவர்கள் வெளியே சென்று உயிர் தப்பியுள்ள காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. குஜராத் அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட 'ஏர் இந்தியா' நிறுவனத்தின் 'போயிங் 787-8 விமானம், புறப்பட்ட 32 வினாடிகளிலேயே விமான நிலையம் அருகே இருந்த பிஜே மருத்துவக் கல்லூரி விடுதி மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியது. விபத்தில் விமானத்தில் பயணித்த 242 பயணிகளில் ஒருவரைத் தவிர மிகுதி 241 பயணிகளும் உயிரிழந்தனர். அத்துடன் மருத்துவக் கல்லூரி விடுதியில் இருந்த மாணவர்களில் 5 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். விமான விபத்து தொடர்பான பல அதிர்ச்சியூட்டும் காட்சிகள் தொடர்ச்சியாக வெளிவரும் நிலையில் மருத்துவக் கல்லூரி விடுதியிலிருந்து மாணவர்கள் வெளியேறும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. மருத்துவக் கல்லூரி விடுதியின் கட்டடத்தின் மீது விமானம் விழுந்து நொருங்கியதில் கட்டடம் முழுவதும் தீப்பிடித்து எரிந்துள்ளன. அவ்வேளை விடுதியிலிருந்த மாணவர்கள் சிலர் தங்களது உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக கட்டடத்தின் பல்கனி மற்றும் அறைகளில் உள்ள ஜன்னல் வழியாக குதித்து வெளியேறியுள்ளனர். கட்டடம் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் மாணவர்கள் வெளியேற எந்தவொரு வழியும் இருந்திருக்க முடியாது. அதனால் அறைகளிலிருந்த நீண்ட துணிகள், படுக்கை விரிப்புகள் என்பவற்றைப் பயன்படுத்தி மாணவர்கள் சிலர் வெளியே சென்று உயிரைக் காப்பற்றிக் கொண்டனர். மாணவர்கள் வெளியேறும் காட்சிகள் ஒரு கணம் அவர்களது உயிர் போய்விடுமா என்ற ஏக்கம், பதற்றம் பயம் என்பவற்றோடு கலந்த ஆபத்தான காட்சியாகப் பதிவாகியுள்ளது. ஒட்டுமொத்த உலகையும் திகைக்க வைத்த ஏர் இந்தியா விமான விபத்தின் காட்சிகள் ஒவ்வொன்றாக வெளிவந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.