• Jun 21 2025

ஏர் இந்திய விமான விபத்து; 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் பலி

Chithra / Jun 20th 2025, 8:27 am
image

 

ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் அடங்குவர் என தகவல் வெளியாகி உள்ளது.

29 வயதான வைபவ் படேலும் அவரது 27 வயது மனைவி ஜினல் கோஸ்வாமியும் தங்கள் வளைகாப்பு விழாவிற்காக அகமதாபாத்திற்குச் சென்றிருந்தனர்.


இந்தத் தம்பதியினர் லண்டனின் குராய்டனில் வசித்து வந்தனர்.

ஆனால் சமீபத்தில் படேல் பணிபுரிந்த ஹாம்ப்ஷயரில் உள்ள சவுத்தாம்ப்டனில் இருந்து குடிபெயர்ந்தனர்.


இந்த தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையின் பிறப்புக்காக மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்ததாக அவர்களின் நெருங்கிய நண்பர் நீரவ் படேல்  தெரிவித்துள்ளார். 

'விமானம் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி வீடு திரும்புவதாகச் சொன்னார்' 


"நாங்கள் மிகவும் நல்ல நண்பர்கள், ஒன்றாக மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்... கோவா,  ராஜஸ்தான் போன்ற இந்தியா முழுவதும் பல பயணங்கள் மேற்கொண்டோம். இது மிகப்பெரிய இழப்பு."என்று அவர் கூறினார்.

ஏர் இந்திய விமான விபத்து; 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் பலி  ஏர் இந்தியா விமான விபத்தில் இறந்தவர்களில் 7 மாத கர்ப்பிணிப் பெண்ணும் அவரது கணவரும் அடங்குவர் என தகவல் வெளியாகி உள்ளது.29 வயதான வைபவ் படேலும் அவரது 27 வயது மனைவி ஜினல் கோஸ்வாமியும் தங்கள் வளைகாப்பு விழாவிற்காக அகமதாபாத்திற்குச் சென்றிருந்தனர்.இந்தத் தம்பதியினர் லண்டனின் குராய்டனில் வசித்து வந்தனர்.ஆனால் சமீபத்தில் படேல் பணிபுரிந்த ஹாம்ப்ஷயரில் உள்ள சவுத்தாம்ப்டனில் இருந்து குடிபெயர்ந்தனர்.இந்த தம்பதியினர் தங்கள் முதல் குழந்தையின் பிறப்புக்காக மிகவும் மகிழ்ச்சியாகவும் உற்சாகமாகவும் இருந்ததாக அவர்களின் நெருங்கிய நண்பர் நீரவ் படேல்  தெரிவித்துள்ளார். 'விமானம் புறப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு அவர் எனக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி வீடு திரும்புவதாகச் சொன்னார்' "நாங்கள் மிகவும் நல்ல நண்பர்கள், ஒன்றாக மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம். கோவா,  ராஜஸ்தான் போன்ற இந்தியா முழுவதும் பல பயணங்கள் மேற்கொண்டோம். இது மிகப்பெரிய இழப்பு."என்று அவர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement