• Apr 02 2025

அனைத்துப் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் : மொரட்டுவ, ஜே'புர அணிகள் சம்பியன்!

Tharmini / Dec 16th 2024, 1:48 pm
image

யாழ். பல்கலைக்கழகப் பொன்விழா நிகழ்வுகளின் வரிசையில்.

இலங்கையிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் நடாத்தப்பட்ட மேசைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி.

கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில், இலங்கைப் பல்கலைக்கழகங்களின் விளையாட்டுச் சம்மேளன அங்கீகாரத்துடன் இடம்பெற்ற இந்தச் சுற்றுப் போட்டியில் இலங்கையிலுள்ள அனைத்து அரச பல்கலைக் கழகங்களினதும் ஆண், பெண் அணிகளுக்கிடையில் போட்டிகள் இடம்பெற்றன.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர், எஸ்.மதிவாணன் மற்றும் பொது வைத்திய நிபுணி அனோஜா மதிவாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், இலங்கைப் பல்கலைக்கழகங்களின் விளையாட்டுச் சம்மேளனத் தலைவரும், இரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானங்கள் பீடாதிபதியுமான கலாநிதி மனோஜ் பெர்ணாண்டோ கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.

போட்டிகள், கடந்த சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு அறிமுக நிகழ்வுடன் ஆரம்பமாகின. 

இறுதிப்போட்டி ஞாயிற்றுக் கிழமை பி.ப 02.30 மணிக்கு இடம்பெற்றது.

ஆண்கள் பிரிவில், மொரட்டுவப் பல்கலைக்கழக அணி அதிக புள்ளிகளைப் பெற்றுச் சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது. 

ஶ்ரீ ஜெயவர்த்தனபுர, களனியப் பல்கலைக்கழகங்களின் அணிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைத் தமதாக்கிக் கொண்டன.

பெண்கள் பிரிவில், ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அணி அதிக புள்ளிகளைப் பெற்றுச் சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது. 

மொரட்டுவ, கொழும்புப் பல்கலைக்கழகங்களின் அணிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைத் தமதாக்கிக் கொண்டன.







அனைத்துப் பல்கலைக்கழக மேசைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் : மொரட்டுவ, ஜே'புர அணிகள் சம்பியன் யாழ். பல்கலைக்கழகப் பொன்விழா நிகழ்வுகளின் வரிசையில். இலங்கையிலுள்ள அனைத்து அரச பல்கலைக்கழகங்களுக்கும் இடையில் நடாத்தப்பட்ட மேசைப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி. கடந்த சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களிலும் பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றது.யாழ். பல்கலைக்கழகத்தின் ஏற்பாட்டில், இலங்கைப் பல்கலைக்கழகங்களின் விளையாட்டுச் சம்மேளன அங்கீகாரத்துடன் இடம்பெற்ற இந்தச் சுற்றுப் போட்டியில் இலங்கையிலுள்ள அனைத்து அரச பல்கலைக் கழகங்களினதும் ஆண், பெண் அணிகளுக்கிடையில் போட்டிகள் இடம்பெற்றன.யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர், எஸ்.மதிவாணன் மற்றும் பொது வைத்திய நிபுணி அனோஜா மதிவாணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும், இலங்கைப் பல்கலைக்கழகங்களின் விளையாட்டுச் சம்மேளனத் தலைவரும், இரஜரட்ட பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞானங்கள் பீடாதிபதியுமான கலாநிதி மனோஜ் பெர்ணாண்டோ கௌரவ விருந்தினராகவும் கலந்து கொண்டனர்.போட்டிகள், கடந்த சனிக்கிழமை காலை 7.30 மணிக்கு அறிமுக நிகழ்வுடன் ஆரம்பமாகின. இறுதிப்போட்டி ஞாயிற்றுக் கிழமை பி.ப 02.30 மணிக்கு இடம்பெற்றது.ஆண்கள் பிரிவில், மொரட்டுவப் பல்கலைக்கழக அணி அதிக புள்ளிகளைப் பெற்றுச் சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது. ஶ்ரீ ஜெயவர்த்தனபுர, களனியப் பல்கலைக்கழகங்களின் அணிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைத் தமதாக்கிக் கொண்டன.பெண்கள் பிரிவில், ஶ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அணி அதிக புள்ளிகளைப் பெற்றுச் சம்பியன் பட்டத்தைத் தனதாக்கிக் கொண்டது. மொரட்டுவ, கொழும்புப் பல்கலைக்கழகங்களின் அணிகள் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களைத் தமதாக்கிக் கொண்டன.

Advertisement

Advertisement

Advertisement