• Feb 02 2025

அரச சொத்துக்கள் குறித்து வெளியான தகவல் - அதிகாரிகள் மீது எழுந்த குற்றச்சாட்டு

Chithra / Feb 2nd 2025, 7:49 am
image


அரசாங்க சொத்துக்கள் குறித்து இன்றுவரை முறையான தணிக்கை நடத்தப்படவில்லை என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.எம்.சி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.

அரச அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாகச் செய்யாததால் இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கணக்காய்வாளர் நாயகம் இந்தக் கருத்தை வெளியிட்டார்.

அரசாங்க சொத்துக்களை ஒரே இடத்திலிருந்து எடுக்க முடியும் என்று யார் உத்தரவாதம் அளிக்க முடியும்? எந்த அரசியல்வாதிகளோ அல்லது அமைச்சர்களோ அதில் சம்பந்தப்படவில்லை.

இந்தக் கணக்கியல் பணிகளை அரசு அதிகாரிகள் தாங்களாகவே செய்கின்றனர். அப்படியானால் அவை அனைத்தும் ஒரே இடத்தில் ஏன் இல்லை?

குறைந்தபட்சம் அரச வாகனங்களின் எண்ணிக்கையை என்னிடம் சொல்ல முடியுமா? ஏன் என்றால் தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அவை இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.

எங்கள் சமீபத்திய தணிக்கை அறிக்கைகளில் அதிக அளவு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.

பல்வேறு நிறுவனங்களுக்கு வாகனங்கள் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

அரச சொத்துக்கள் குறித்து வெளியான தகவல் - அதிகாரிகள் மீது எழுந்த குற்றச்சாட்டு அரசாங்க சொத்துக்கள் குறித்து இன்றுவரை முறையான தணிக்கை நடத்தப்படவில்லை என கணக்காய்வாளர் நாயகம் டபிள்யூ.பி.எம்.சி. விக்கிரமரத்ன தெரிவித்துள்ளார்.அரச அதிகாரிகள் தங்கள் கடமைகளை முறையாகச் செய்யாததால் இதுபோன்ற நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.கொழும்பில் கைத்தொழில் அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட செயலமர்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கணக்காய்வாளர் நாயகம் இந்தக் கருத்தை வெளியிட்டார்.அரசாங்க சொத்துக்களை ஒரே இடத்திலிருந்து எடுக்க முடியும் என்று யார் உத்தரவாதம் அளிக்க முடியும் எந்த அரசியல்வாதிகளோ அல்லது அமைச்சர்களோ அதில் சம்பந்தப்படவில்லை.இந்தக் கணக்கியல் பணிகளை அரசு அதிகாரிகள் தாங்களாகவே செய்கின்றனர். அப்படியானால் அவை அனைத்தும் ஒரே இடத்தில் ஏன் இல்லைகுறைந்தபட்சம் அரச வாகனங்களின் எண்ணிக்கையை என்னிடம் சொல்ல முடியுமா ஏன் என்றால் தணிக்கை செய்யப்பட்டிருந்தால் அவை இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை.எங்கள் சமீபத்திய தணிக்கை அறிக்கைகளில் அதிக அளவு தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.பல்வேறு நிறுவனங்களுக்கு வாகனங்கள் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement