• Jun 12 2025

மிஹிந்து பெரஹெராவில் குழம்பிய யானை...!

shanuja / Jun 11th 2025, 11:54 am
image

பதுளையில்  நடைபெற்ற மிஹிந்து பெரஹெராவின் போது, யானையொன்று குழம்பியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. 


பதுளை கைலகொட மிஹிந்து பெரஹெரா நேற்று (10)  இரவு பதுளை நகரில் இடம்பெற்றது. 


மிஹிந்து  பெரஹெரா ஆண்டுதோறும் பதுளை  சத்தர்மானந்த பிரிவேனா விகாரையால் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. 


இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பெரஹெரா யானைகள், நடனங்கள் உள்ளிட்ட பல அம்சங்களுடன் நேற்று இரவு  நடைபெற்றது. 


இதன்போது வீதி உலாவில் ஈடுபட்ட யானையொன்று திடீரென குழம்பியதால் பெரஹெராவில்  பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. 


அதன்பின் சிறிது நேரத்திற்குள் யானை, பாகனால் அமைதிப்படுத்தியதை அடுத்து, பெரஹெரா மீண்டும்  சிறப்பாக நடைபெற்றது.

மிஹிந்து பெரஹெராவில் குழம்பிய யானை. பதுளையில்  நடைபெற்ற மிஹிந்து பெரஹெராவின் போது, யானையொன்று குழம்பியதால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. பதுளை கைலகொட மிஹிந்து பெரஹெரா நேற்று (10)  இரவு பதுளை நகரில் இடம்பெற்றது. மிஹிந்து  பெரஹெரா ஆண்டுதோறும் பதுளை  சத்தர்மானந்த பிரிவேனா விகாரையால் ஏற்பாடு செய்யப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பெரஹெரா யானைகள், நடனங்கள் உள்ளிட்ட பல அம்சங்களுடன் நேற்று இரவு  நடைபெற்றது. இதன்போது வீதி உலாவில் ஈடுபட்ட யானையொன்று திடீரென குழம்பியதால் பெரஹெராவில்  பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. இதன்போது எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது. அதன்பின் சிறிது நேரத்திற்குள் யானை, பாகனால் அமைதிப்படுத்தியதை அடுத்து, பெரஹெரா மீண்டும்  சிறப்பாக நடைபெற்றது.

Advertisement

Advertisement

Advertisement