• Jun 27 2025

"டாக்டர் ஹரிணி அமரசூரியவுடன் ஒரு மாலை" - கனடாவில் சிறப்பு நிகழ்வு!

shanuja / Jun 26th 2025, 9:19 pm
image

இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய, கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட "டாக்டர் ஹரிணி அமரசூரியவுடன் ஒரு மாலை" எனும் சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். 


கனடா - வான்கூவரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் கற்றல் ஆலோசனை குழுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  கடந்த  செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். 


கனடாவைச் சென்றடைந்த பிரதமர்,  பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசாங்கம், பொதுநலவாயக் கல்வி அமைப்பு மற்றும் கனடாவின் உலகளாவிய விவகாரங்கள்  ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன், ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.


அதனைத் தொடர்ந்து அவரது விஜயத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட  "டாக்டர் ஹரிணி அமரசூரியாவுடன் ஒரு மாலை" என்ற சிறப்பு சமூக நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். 


பிரதமரின் அலுவலகத்தின்படி, இந்த நிகழ்வு இலங்கை வம்சாவளி சமூகத்தைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பிரதமருடன் தொடர்புகொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"டாக்டர் ஹரிணி அமரசூரியவுடன் ஒரு மாலை" - கனடாவில் சிறப்பு நிகழ்வு இலங்கைப் பிரதமர் ஹரிணி அமரசூரிய, கனடாவில் ஏற்பாடு செய்யப்பட்ட "டாக்டர் ஹரிணி அமரசூரியவுடன் ஒரு மாலை" எனும் சிறப்பு நிகழ்வில் கலந்து கொண்டுள்ளார். கனடா - வான்கூவரில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் கற்றல் ஆலோசனை குழுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய  கடந்த  செவ்வாய்க்கிழமை (24) அதிகாலை கனடாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார். கனடாவைச் சென்றடைந்த பிரதமர்,  பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண அரசாங்கம், பொதுநலவாயக் கல்வி அமைப்பு மற்றும் கனடாவின் உலகளாவிய விவகாரங்கள்  ஆகியவற்றின் ஒருங்கிணைப்புடன், ஒட்டாவாவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் சிரேஷ்ட அதிகாரிகளால் அன்புடன் வரவேற்கப்பட்டார்.அதனைத் தொடர்ந்து அவரது விஜயத்தில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் சர்ரே நகரில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட  "டாக்டர் ஹரிணி அமரசூரியாவுடன் ஒரு மாலை" என்ற சிறப்பு சமூக நிகழ்வில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கலந்துகொண்டார். பிரதமரின் அலுவலகத்தின்படி, இந்த நிகழ்வு இலங்கை வம்சாவளி சமூகத்தைச் சேர்ந்த மதத் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் பிரதமருடன் தொடர்புகொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement