• May 14 2026

புயலில் செல்ஃபி எடுக்க முயன்ற இலங்கை, இந்திய பெண்களுக்கு நடந்த சம்பவம்

Chithra / Sep 25th 2025, 6:32 pm
image

புயலில் செல்ஃபி எடுக்க முயன்ற அதே நேரத்தில் சிறுவன் ஒருவரை ஆபத்தில் ஆழ்த்த முயன்றதாக கூறி, இலங்கை மற்றும் இந்திய பெண்கள் இருவரை ஹோங்கொங் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

சீனாவை நோக்கி நகரும் ' ராகசா' புயல், ஹோங்கொங்கை மிகவும் பாதித்துள்ளது. 

இதன் விளைவாக, மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், கடலோரப் பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறும் அந்நாட்டின் அனரத்த முகாமைத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். 

இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய், தனது பிள்ளையுடன் புயலின் புகைப்படம் எடுக்கச் சென்றதுடன் செல்ஃபியை தாயின் தோழியான இலங்கைப் பெண் எடுத்துள்ளார்.  

அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, ​​திடீரென ஒரு அலை அவர்கள் மூவரையும் இழுத்துச் சென்ற நிலையில், மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

எனினும் அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்திலும் இல்லை என்று கூறப்படுகிறது. 


இருப்பினும், எச்சரிக்கை சமிக்ஞைகள் இருந்தபோதிலும், அவர்களது 05 வயது பிள்ளையை ஆபத்தில் ஆழ்த்தி இந்த புகைப்படத்தை எடுத்ததற்காக இரண்டு பெண்களையும் ஹோங்கொங் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

அருகில் இருந்த ஒருவர் அவர்கள் புகைப்படம் எடுத்த தருணத்தையும், பின்னர் அவர்கள் அடித்துச் செல்லப்பட்ட விதத்தையும் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். 

புயலில் செல்ஃபி எடுக்க முயன்ற இலங்கை, இந்திய பெண்களுக்கு நடந்த சம்பவம் புயலில் செல்ஃபி எடுக்க முயன்ற அதே நேரத்தில் சிறுவன் ஒருவரை ஆபத்தில் ஆழ்த்த முயன்றதாக கூறி, இலங்கை மற்றும் இந்திய பெண்கள் இருவரை ஹோங்கொங் பொலிஸார் கைது செய்துள்ளனர். சீனாவை நோக்கி நகரும் ' ராகசா' புயல், ஹோங்கொங்கை மிகவும் பாதித்துள்ளது. இதன் விளைவாக, மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்குமாறும், கடலோரப் பகுதிகளிலிருந்து விலகி இருக்குமாறும் அந்நாட்டின் அனரத்த முகாமைத்துவ அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தாய், தனது பிள்ளையுடன் புயலின் புகைப்படம் எடுக்கச் சென்றதுடன் செல்ஃபியை தாயின் தோழியான இலங்கைப் பெண் எடுத்துள்ளார்.  அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்தபோது, ​​திடீரென ஒரு அலை அவர்கள் மூவரையும் இழுத்துச் சென்ற நிலையில், மூவரும் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். எனினும் அவர்களின் உயிருக்கு எந்த ஆபத்திலும் இல்லை என்று கூறப்படுகிறது. இருப்பினும், எச்சரிக்கை சமிக்ஞைகள் இருந்தபோதிலும், அவர்களது 05 வயது பிள்ளையை ஆபத்தில் ஆழ்த்தி இந்த புகைப்படத்தை எடுத்ததற்காக இரண்டு பெண்களையும் ஹோங்கொங் பொலிஸார் கைது செய்துள்ளனர். அருகில் இருந்த ஒருவர் அவர்கள் புகைப்படம் எடுத்த தருணத்தையும், பின்னர் அவர்கள் அடித்துச் செல்லப்பட்ட விதத்தையும் தனது கையடக்க தொலைபேசியில் வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement