பண்டாரவளை - எல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அருகில் வெளிநாட்டவர் உள்ளிட்ட மூவர் பேர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர்.
நேற்று அதிகாலை 4 மணியளவில் அடையாளந்தெரியாத குழுவொன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரும் இலங்கையர்கள் இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தாக்குதலின் போது காயங்களுக்கு உள்ளான மூவரும் தியத்தலாவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வெளிநாட்டுப் பெண்ணிடம் குறித்த குழு தவறாக நடக்க முற்பட்ட வேளையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாக்குதல் இடம்பெற்றுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய எல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இலங்கையில் சுவீடன் நாட்டு பெண் உள்ளிட்ட மூவர் மீது இனந்தெரியாத குழு தாக்குதல் பண்டாரவளை - எல்ல பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றுக்கு அருகில் வெளிநாட்டவர் உள்ளிட்ட மூவர் பேர் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்று அதிகாலை 4 மணியளவில் அடையாளந்தெரியாத குழுவொன்றினால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுவீடன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரும் இலங்கையர்கள் இருவரும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தாக்குதலின் போது காயங்களுக்கு உள்ளான மூவரும் தியத்தலாவை ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக எல்ல பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வெளிநாட்டுப் பெண்ணிடம் குறித்த குழு தவறாக நடக்க முற்பட்ட வேளையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக தாக்குதல் இடம்பெற்றுள்ளது என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்ய எல்ல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.