• Sep 19 2024

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் அறிவிப்பு..!

Sharmi / Aug 19th 2024, 11:38 am
image

Advertisement

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் சபையை கூட்டி யாப்பின்படி மீண்டும் தலைவர், செயலாளர் தெரிவுகளை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அக் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிமீதான வழக்குகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று(18) வவுனியாவில் தனியார் விடுதியில் நடைபெற்றது.

கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்திலேயே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில், எமது மக்களுக்கு வழிகாட்டுவதற்காக ஆவணம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளதாகவும் இதன்போது சுமந்திரன் குறிப்பிட்டார். 

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் தெரிவு தொடர்பில் அறிவிப்பு. இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் சபையை கூட்டி யாப்பின்படி மீண்டும் தலைவர், செயலாளர் தெரிவுகளை நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளதாக அக் கட்சியின் ஊடக பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ சுமந்திரன் தெரிவித்தார்.அத்துடன், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிமீதான வழக்குகளை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் நேற்று(18) வவுனியாவில் தனியார் விடுதியில் நடைபெற்றது.கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் நடந்த இந்தக்கூட்டத்திலேயே இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டன என தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளர் எம். ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும் நிலையில், எமது மக்களுக்கு வழிகாட்டுவதற்காக ஆவணம் ஒன்றைத் தயாரிக்கவுள்ளதாகவும் இதன்போது சுமந்திரன் குறிப்பிட்டார். 

Advertisement

Advertisement

Advertisement