• Apr 25 2024

மனிதாபிமான நடவடிக்கைக்கு ஜப்பான் அரசினால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள மற்றுமொரு நிதியுதவி!

Tamil nila / Dec 2nd 2022, 11:41 am
image

Advertisement

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் செயல்திட்டதிற்கு எம்ஏஜி எனப்படும் சுரங்க ஆலோசனைக் குழுவிற்கு ஜப்பான் அரசு சுமார் 648,148 அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.


இதற்கான உடன்படிக்கையில் ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி மற்றும் எம்ஏஜியின் இலங்கைக்கான இயக்குநர் கிறிஸ்டி மெக்லெனன் ஆகியோர் கடந்த மாதம் (30 நவம்பர் 2022) கையெழுத்திட்டதாக ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.



இந்த ஜப்பானிய நிதி உதவி 14ஆவது கண்ணிவெடி அகற்றும் செயல் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட 13 செயற்திட்டங்களில் 15,831 கண்ணிவெடிகள் மற்றும் பிற வெடிபொருட்கள் மீட்கப்பட்டு, 2,965,949 சதுர மீட்டர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


இந்த திட்டத்தின் மூலம் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 259,464 சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பான நிலங்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. இதன்மூலம் 7,424 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



மனிதாபிமான நடவடிக்கைக்கு ஜப்பான் அரசினால் இலங்கைக்கு கிடைக்கவுள்ள மற்றுமொரு நிதியுதவி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் புதைக்கப்பட்ட கண்ணி வெடிகளை அகற்றும் செயல்திட்டதிற்கு எம்ஏஜி எனப்படும் சுரங்க ஆலோசனைக் குழுவிற்கு ஜப்பான் அரசு சுமார் 648,148 அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது.இதற்கான உடன்படிக்கையில் ஜப்பான் தூதுவர் ஹிடேக்கி மிசுகோஷி மற்றும் எம்ஏஜியின் இலங்கைக்கான இயக்குநர் கிறிஸ்டி மெக்லெனன் ஆகியோர் கடந்த மாதம் (30 நவம்பர் 2022) கையெழுத்திட்டதாக ஜப்பான் தூதரகம் தெரிவித்துள்ளது.இந்த ஜப்பானிய நிதி உதவி 14ஆவது கண்ணிவெடி அகற்றும் செயல் திட்டத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட 13 செயற்திட்டங்களில் 15,831 கண்ணிவெடிகள் மற்றும் பிற வெடிபொருட்கள் மீட்கப்பட்டு, 2,965,949 சதுர மீட்டர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.இந்த திட்டத்தின் மூலம் மன்னார், முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் 259,464 சதுர மீற்றர் நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு உள்நாட்டில் இடம்பெயர்ந்த மக்களுக்கு பாதுகாப்பான நிலங்களை பெற்றுக்கொடுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. இதன்மூலம் 7,424 பேரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Advertisement

Advertisement

Advertisement