• May 17 2024

இலங்கையில் தொடரும் அசம்பாவிதம் - மற்றுமொரு கைதி சிறைச்சாலையில் மரணம்..!

Chithra / Jan 18th 2024, 10:22 am
image

Advertisement

 

களுத்துறை சிறைச்சாலையில் மற்றுமொரு கைதி உயிரிழந்துள்ளதாக வடக்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர் பாணந்துறை, மோதரைவெல பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடையவராவார்.

இவர் கடந்த 14 ஆம் திகதி சுகயீனம் காரணமாக களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று (18) உயிரிழந்துள்ளார்.

இவர் கடந்த 9ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டு பாணந்துறை நீதிவான் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி களுத்துறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

வடக்கு களுத்துறை பொலிஸ் பரிசோதகர் தமித் ஜயதிலகவின் அறிவுரைக்கு அமைய சம்பவம்  தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 4 நாட்களில் மூன்று கைதிகள் சுகயீனம் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் தொடரும் அசம்பாவிதம் - மற்றுமொரு கைதி சிறைச்சாலையில் மரணம்.  களுத்துறை சிறைச்சாலையில் மற்றுமொரு கைதி உயிரிழந்துள்ளதாக வடக்கு களுத்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (18) இடம்பெற்றுள்ளது.உயிரிழந்தவர் பாணந்துறை, மோதரைவெல பிரதேசத்தை சேர்ந்த 60 வயதுடையவராவார்.இவர் கடந்த 14 ஆம் திகதி சுகயீனம் காரணமாக களுத்துறை நாகொடை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று (18) உயிரிழந்துள்ளார்.இவர் கடந்த 9ஆம் திகதி ஹெரோயின் போதைப்பொருளுடன் கைதுசெய்யப்பட்டு பாணந்துறை நீதிவான் நிதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து நீதிமன்ற உத்தரவின் படி களுத்துறை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.வடக்கு களுத்துறை பொலிஸ் பரிசோதகர் தமித் ஜயதிலகவின் அறிவுரைக்கு அமைய சம்பவம்  தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.இதேவேளை, கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் 4 நாட்களில் மூன்று கைதிகள் சுகயீனம் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement